தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மங்களகோம்பை செல்லும் சாலையில் புலியூத்து ஆற்றின் குறுக்கே பாலம் தேவை

Advertisement

*பொதுமக்கள் எதிர்பார்ப்பு

போடி : போடி அருகே மங்களகோம்பை செல்லும் சாலையில் புலியூத்து ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.போடி அருகே போடிமெட்டு மலைப்பகுதியின் அடிவாரத்தில் சிறப்பு வாய்ந்த பரமசிவன் மலை மற்றும் கோயில் அமைந்துள்ளது. இதன் பின்பகுதியில் சுமார் 4 கி.மீ தூரத்தில் மங்களக்கோம்பை என்ற கிராமம் இருக்கிறது. இந்த கிராமத்திற்கு செல்லும் மலைச்சாலையின் இருபுறமும் சுமார் 5000 ஏக்கருக்கு மேலாக மா மற்றும் தென்னந்தோப்புகள் உள்ளன.

போடி பகுதியைச் சேர்ந்த சுமார் 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் தினந்தோறும் பரமசிவன் மலையடிவார சாலையில் போடி முந்தல் சாலை, ஆண்டி ஓடை பிரிவு, மங்களக்கோம்பை வழியாக தினந்தோறும் தோட்டத்திற்கு சென்று வருகின்றனர்.இவர்களில் பெரும்பாலானோர் டூவீலர்கள் மற்றும் ஜீப்புகளிலும் சென்று தோட்டப்பணிகளை மேற்கொள்கின்றனர். இப்பகுதியில் மா மற்றும் தென்னந்தோப்புகளுக்குள் பலரும் வீடுகள் கட்டி வசிக்கின்றனர். இங்குள்ள மங்களக்கோம்பை சாலையின் ஒருபகுதி போடி ஊராட்சி ஒன்றியம் அணைக்கரைப்பட்டி கிராம ஊராட்சிக்கு சொந்தமானது. பரமசிவன் மலையடிவாரம் கடந்து சுமார் 4 கி.மீ கிலோ தூரம் போடி மேலசொக்கநாதபுரம் பேரூராட்சி பகுதியாக இருக்கிறது.

இச்சாலையில் போக்குவரத்திற்கு பயனளிக்கும் வகையில் ஏழு ஆண்டுகளுக்கு முன் சுமார் தார்ச்சாலை மற்றும் இணைப்பு சாலைகள் அமைக்கப்பட்டன.போடிமெட்டு மலைச்சாலையில் எட்டாவது கொண்டை ஊசி வளைவில் இருக்கும் புலியூத்து ஊற்றுப்பகுதியில் மலைகளிலிருந்து வரும் தண்ணீர் சேர்ந்து போடிமெட்டு மலைச்சாலையின் குறுக்கே உள்ள பெரும் பாலத்தின் அடிவாரம் வழியாக சுமார் 20 கி.மீ தூரம் கொண்ட புலியூத்து ஆற்றின் அகன்ற கால்வாய் செல்கிறது.

மழைக்காலங்களில் மங்களக்கோம்பை வழியாக புலியூத்து ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவது வழக்கம். இதனால் போக்குவரத்து பாதிக்காத வகையில், பரமசிவன் மலையடிவார பகுதியில் புலியூத்து ஆற்றின் குறுக்கே, தாழ்வான சிமெண்ட் தடுப்பணை கட்டப்பட்டது.ஆனால் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக இந்த சிமெண்ட் தடுப்பணை மற்றும் அதன் தளம் முழுமையாக சேதமடைந்து தற்போது பாறைகளாக மட்டுமே கிடக்கிறது. இதனால் மழைக்காலங்களில் இப்பகுதியை கடந்து செல்ல முடியாமல் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தவிக்கின்றனர்.

மேலும் கோடை காலத்திலும் இப்பகுதி வழியாக தண்ணீர் வரத்து சிறிதளவு இருக்கும். இதன் எதிரொலியாக இதனை கடந்து செல்வது சற்று கடினமானதாகவே உள்ளது. எனவே இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், இப்பகுதியில் உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement

Related News