செங்கல்பட்டு அருகே காவலர் வீட்டில் நகை, பணம் கொள்ளை
Advertisement
இவரது, மனைவி உஷாராணியும் ஊரப்பாக்கத்தில் உள்ள மளிகை கடையை மூடிவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இரவில் தூங்கிவிட்டு நேற்று காலை எழுந்து பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டிருந்தது. இதில், பீரோவிலிருந்த 2 சவரன் தங்க நகைகள், ₹25 ஆயிரம் பணம், வெள்ளிப்பொருட்கள் ஆகியவை திருடுபோய் இருப்பதைகண்டு அதிர்ச்சியடைந்த உஷாராணி, இதுகுறித்து செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின்பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார், காவலர் வீட்டில் நகை, பணம் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement