தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

செங்கல்பட்டு அருகே டயர் பஞ்சரானதால் விபரீதம்; பழுதாகி நின்ற கார் மீது சொகுசு கார் பயங்கர மோதல்; 2 பேர் பரிதாப சாவு

Advertisement

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே டயர் பஞ்சரானதால் கார் மீது சொகுசு கார் மோதிய விபத்தில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர். பக்ரீத் பண்டிகையை கொண்டாடி விட்டு துபாய் செல்லும்போது இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் மல்லியம் ஆணைமலநல்லூர் பகுதியை சேர்ந்தவர் ஜாபர் அலி. இவரது மகன் இய்யாதீன் (38), துபாயில் பணியாற்றி வந்தார். பக்ரீத் பண்டிகையை கொண்டாடுவதற்காக 15 நாட்கள் விடுமுறையில் துபாயில் இருந்து சொந்த ஊருக்கு வந்திருந்தார். நேற்று குடும்பத்துடன் பக்ரீத் பண்டிகையை கொண்டாடி விட்டு மீண்டும் துபாய் செல்ல முடிவு செய்திருந்தார். இன்று அதிகாலை, சென்னையில் இருந்து விமானத்தில் செல்ல வேண்டும் என்பதால் நேற்றிரவு மயிலாடுதுறை அடுத்த குத்தாலம் மாதிரிமங்களம் பகுதியை சேர்ந்த சந்துரு (35) என்பவரது வாடகை காரில் இய்யாதீன் சென்னைக்கு புறப்பட்டார். அவருடன் நண்பர்களான அன்வர் சாதிக் (43), ஐயப்பன் (38) ஆகியோரும் வந்தனர்.

இன்று அதிகாலை செங்கல்பட்டு அடுத்த பழவேலி பைபாஸ் சாலையில் கார் வந்தபோது திடீரென டயர் பஞ்சரானது. அதனால் காரை ஓரமாக நிறுத்தி விட்டு டிரைவர் சந்துருவும் இய்யாதீனும் டயரை மாற்றும் பணியில் ஈடுபட்டனர். ஐயப்பனும், ஜாபர்சாதிக்கும் காரில் இருந்து இறங்கி சிறிது தூரம் வாக்கிங் சென்றனர். கார் டிக்கியை திறந்து அதிருந்த ஒரு டயரையும் ஜாக்கியையும் எடுத்து சந்துருவும், இய்யாதீனும் மாற்ற முயன்றனர். அந்த நேரத்தில், அதிவேகமாக வந்த ஒரு கார், கண் இமைக்கும் நேரத்தில் சந்துரு, இய்யாதீன் மீது பயங்கரமாக மோதி விட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தனர். அவர்களது காரும் சாலையோரம் கவிழ்ந்தது.

தகவலறிந்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். 2 சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய கார் டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த விபத்தில் ஐய்யப்பன், அன்வர் ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். துபாய் செல்ல இருந்த நண்பன் மற்றும் டிரைவர் விபத்தில் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Related News