தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

லஞ்சம் வாங்கியபோது பிடிபட்டதால் ரூ.15,000ஐ காற்றில் பறக்கவிட்டு தப்ப முயன்ற சப்-இன்ஸ்பெக்டர்: ரூ.5,000ஐ அள்ளி சென்ற மக்கள்

புதுடெல்லி: லஞ்சம் வாங்கியபோது பிடிப்பட்டதால் சப்-இன்ஸ்பெக்டர் ரூ.15,000ஐ காற்றில் பறக்கவிட்டு தப்ப முயன்றார். அதில் ரூ.5,000ஐ மக்கள் அள்ளி சென்றனர். மத்திய டெல்லியில் உள்ள ஹவுஸ் காசி காவல் நிலையத்தில் உதவி சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் ராகேஷ் குமார். இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு நபரிடம் பொய் வழக்கு போடமல் இருக்க லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அந்த நபர் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தார்.

Advertisement

இதையடுத்து, ராகேஷ் குமாரை கையும் களவுமாக பிடிக்க முடிவு செய்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் புகார்தாரரிடம் ரசாயன பொடி தடவிய ரூ.15,000ஐ கொடுத்து, அதை ராகேஷ் குமாரிடம் வழங்கும்படி கூறினர். அதன்படி ஹவுஸ் காசி காவல் நிலையத்துக்கு சென்ற புகார்தாரர், உதவி சப்-இன்ஸ்பெக்டர் ராகேஷ் குமாரை வெளியே அழைத்து அவரிடம் ரூ.15,000ஐ கொடுத்தார். பின்னர் அவர் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்கு சிக்னல் கொடுத்தார்.

உடனடியாக அவர்கள் ராகேஷ் குமாரை பிடிக்க விரைந்தனர். இதைப்பார்த்து பதறிப்போன ராகேஷ் குமார் தான் ஒரு பொறியில் சிக்கியிருப்பதை உணர்ந்தார். உடனடியாக ஆதராத்தை அழிக்க முடிவு செய்த அவர் கையில் வைத்திருந்த ரூ.15,000ஐ காற்றில் வீசிவிட்டு ஓட்டம் பிடித்தார். வீசி எறியப்பட்ட ரூபாய் நோட்டுகளை எடுக்க மக்கள் கூட்டம் கூடியது. அவர்கள் போட்டிப் போட்டுக் கொண்டு பணத்தை எடுத்தனர்.

லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அவர்களை தடுக்க முயன்றனர். இருப்பினும் ரூ.5,000ஐ எடுத்துக் கொண்டு அவர்கள் அங்கிருந்து தப்பினர். ரூ.10,000ஐ லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மீட்டனர். மேலும் தப்பி ஓடிய உதவி சப்-இன்ஸ்பெக்டர் ராகேஷ் குமாரை மடக்கிப்பிடித்தனர். இது தொடர்பாக அவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement