தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

“அரசுக்கு எதிரான வழக்கை என் தலைமையிலான அமர்வு விசாரிப்பதை ஒன்றிய அரசு விரும்பவில்லை” : தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் குற்றச்சாட்டு

டெல்லி : ஒன்றிய அரசுக்கு எதிரான வழக்குகளை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு விசாரிப்பதை ஒன்றிய அரசு விரும்பவில்லை என்று தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் குற்றம் சாட்டி உள்ளார். நள்ளிரவில் மனு தாக்கல் செய்து வழக்கை ஒத்திவைக்க முயற்சி நடந்துள்ளது என்றும் தலைமை நீதிபதி விமர்சனம் செய்துள்ளார். நாடு முழுவதும் தீர்ப்பாயங்களுக்கு ஒரே மாதிரியான நியமனம் நடத்த உத்தரவிடக் கோரிய வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அட்டார்னி ஜெனரல் வெங்கட்ரமணி, வழக்கை 5 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.

Advertisement

இதனை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி, "மனுதார்கள் தரப்பிலான வாதங்கள் முடிந்த பின்னர் இந்த கோரிக்கை வைப்பதை ஏற்க முடியாது. இதுவரை என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? தனது அமர்வு வழக்கை விசாரிக்க கூடாது என்று ஒன்றிய அரசு விரும்புகிறது. அதனால்தான் நள்ளிரவில் வழக்கை உயர் அமர்வுக்கு மாற்ற மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது," என்று கடுமையாக விமர்சித்தார். பின்னர் ஒன்றிய அரசின் கோரிக்கையை நிராகரித்த தலைமை நீதிபதி அமர்வு, வழக்கை 7ம் தேதி விசாரணைக்கு ஒத்தி வைத்தது. இதனிடையே உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், இம்மாதம் 23ம் தேதி ஓய்வு பெறுகிறார்.வழக்கை தாமதப்படுத்தினால் அவரால் விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Related News