தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பிரேசில் ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி 5 நாட்கள் வெளிநாடு பயணம்: நைஜீரியா, கயானா நாடுகளுக்கும் செல்கிறார்

புதுடெல்லி: பிரதமர் மோடி ஆப்பிரிக்கா, கரீபியன் மற்றும் தென் அமெரிக்கா நாடுகளுக்கு ஐந்து நாள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். மேற்கண்ட நாடுகளுடன் கயானா, நைஜீரியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளுக்கும் செல்கிறார். பிரதமர் மோடியின் பயணம் வரும் 16ம் தேதி தொடங்கி 21ம் தேதி முடிவடையும். இந்தப் பயணத்தின் தொடக்கத்தில், ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவுக்கு ெசல்கிறார். ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய பொருளாதாரம் மற்றும் அதிக மக்கள் தொகை கொண்ட நாடான நைஜீரியாவிலிருந்து இந்தியா அதிக அளவு கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதால், இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு தொடர்பான முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.
Advertisement

தொடர்ந்து வரும் 17 முதல் 19ம் தேதி வரை பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெறும் ஜி-20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். கடந்தாண்டு, ஜி-20 மாநாடு இந்தியாவில் நடத்தப்பட்ட போது, அந்த அமைப்பின் தலைவராக பிரதமர் மோடி இருந்தார். மாநாடு முடிந்தவுடன் பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வாவிடம், ஜி20 மாநாட்டின் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.

வரும் 19 முதல் 21ம் தேதி வரை கயானாவில் இருக்கும் பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் இர்ஃபான் அலியை சந்திக்கிறார். பாதுகாப்பு, எரிசக்தி மற்றும் விவசாயம் போன்ற துறைகளில் கயானாவுடன் இந்தியா புதிய ஒப்பந்தம் போடவுள்ளது. அப்போது இந்தியா-கரீபியன் உச்சிமாநாட்டிற்கு பிரதமர் மோடி தலைமை தாங்குவார். கயானாவின் அதிபர் அலி இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பதால், கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற பிரவாசி பாரதிய திவாஸின் தலைமை விருந்தினராக அவர் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Related News