தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அரசு சார்பில் மரியாதை; விபத்தில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடலுறுப்புகள் தானம்: சென்னை பறந்த கண்கள், சிறுநீரகம், இதயம்

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் விபத்தில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடலுறுப்புகள் தானமாக பெறப்பட்டு விமானத்தில் சென்னை அனுப்பி வைக்கப்பட்டது. பெண்ணின் உடலுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள கொல்லங்குளம் பகுதியைச் சேர்ந்த செல்வக்குமார். இவரது மனைவி சந்தியா (29). இவர் நேற்று முன்தினம் டூவீலரில் சென்றபோது, விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்தார். இவரது உடல் ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அவரது குடும்பத்தினர் சந்தியாவின் உடல் உறுப்புகளை தானம் செய்ய மருத்துவமனை நிர்வாகத்திடம் தெரிவித்தனர்.

Advertisement

இதையடுத்து சந்தியாவின் கண்கள், சிறுநீரகம், இதயம், கல்லீரல், கிட்னி உள்ளிட்ட உறுப்புகள் அனைத்தும் பெறப்பட்டு அவசர ஆம்புலன்ஸ் மூலம் மதுரை விமானநிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, பின் அங்கிருந்து சென்னைக்கு விமானத்தில் கொண்டு செல்லப்பட்டது.

இந்நிலையில், உயிரிழந்த பெண்ணின் உடலை இன்று உறவினர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் அமுதராணி தலைமையில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர். டீன் அமுதராணி மற்றும் போலீசார் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து அவரது உடல் ஆம்புலன்ஸுக்கு கொண்டு செல்லும் வழியில் இருபுறமும் செவிலியர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தி வழி அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சந்தியாவின் உடல் சொந்த ஊரான கொல்லம்குளத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இது குறித்து டீன் அமுதராணி கூறுகையில், ‘ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டது இதுவே முதல்முறையாகும்’ என்றார்.

Advertisement