தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவக்கம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

சித்தூர்: சித்தூர் காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயில் வருடாந்திர பிரமோற்சவம் இன்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கோலாகலமாக தொடங்கியது. மூலவருக்கு அதிகாலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மாலை மூலவருக்கு புஷ்ப காவடி சமர்ப்பணம் செய்யப்பட்டது. இரவு உற்சவ மூர்த்தி சிறப்பு அலங்காரத்தில் மாடவீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விநாயகர் சதுர்த்தியையொட்டி கோயிலில் கூட்டம் அலைமோதியது.

Advertisement

இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியொட்டி 21 நாட்கள் நடைபெறும் வருடாந்திர பிரம்மோற்சவம் இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து 9 மணியில் இருந்து 10மணிக்குள் கோயிலில் உள்ள தங்ககொடி மரத்தில் வேத பண்டிதர்கள் வேத மந்திரங்கள் முழங்க பிரம்மோற்சவ கொடியை ஏற்றினர். தொடர்ந்து மகா தீபராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இன்றிரவு விநாயகர் அம்ச வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி மாட வீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். வருடாந்திர பிரம்மோற்சவத்தையொட்டி கோயில் வளாகம் முழுவதும் பூக்கள் மற்றும் வண்ண மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

Advertisement