தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காதலனுடன் செல்போனில் தகராறு மருத்துவ மாணவி தூக்கிட்டு தற்கொலை: சோகத்தில் உயிரை மாய்த்த காதலன்

திருவாரூர்: திருவாரூரில் காதலனுடன் செல்போனில் தகராறில் மருத்துவ மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தகவல் தெரிய வந்த அரியலூரில் இருந்த காதலனும் வீட்டில் தூக்கிட்டு உயிரை மாய்த்தார்.

Advertisement

திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரியில் அரியலூர் மாவட்டம் சோழமாதேவி அம்பிகாபுரம் காலனியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகள் சுமித்ரா (19) என்பவர், பாராமெடிக்கல் பிரிவில் ரேடியோகிராபி முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர், தன்னுடன் படிக்கும் 10 மாணவிகளுடன் அங்குள்ள ஏ.கே.எம் நகரில் ஒரு வீட்டின் மாடியில் வாடகைக்கு தங்கி படித்து வந்தார்.

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு 12 மணி அளவில் சகமாணவிகள் எழுந்து பார்த்தபோது, சுமித்ராவை காணவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த அவர்கள், மாடியில் இருந்து வெளியில் தேடிய போது வீட்டின் முன்பகுதியில் பைக் நிறுத்துவதற்காக போடப்பட்டிருந்த ஷெட் ஒன்றில் துப்பட்டாவால் சுமித்ரா தூக்கில் தொங்கியது தெரியவந்தது. இதையடுத்து, தகவலின் பேரில் அங்கு வந்த திருவாரூர் நகர போலீசார், சுமித்ரா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக போலீசார் முதல் கட்ட விசாரணை நடத்தியதில், தற்கொலை செய்து கொண்ட சுமித்ராவிற்கும், அரியலூர் மாவட்டம் பெருமாள் நத்தம் தென்கச்சி பகுதியை சேர்ந்த சுதாகர் மகன் யுவராஜ்(21) என்பவருக்குமிடையே பள்ளி காலம் முதல் காதல் இருந்து வந்துள்ளது. வழக்கம்போல் நேற்றுமுன்தினம் இரவு 10மணியளவில் காதலன் யுவராஜூடன், மாணவி சுமித்ரா செல்போனில் பேசிக்கொண்டிருந்தபோது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், அவர் சோகமாக இருந்துள்ளார்.அதன் பின்னர் சகமாணவிகள், தூங்க சென்ற நேரத்தில் சுமித்ரா மனஉளைச்சலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் தொடர் விசாரணை நடத்தியதில், சுமித்ரா தற்கொலை செய்து கொண்ட தகவலை சகமாணவிகளில் ஒருவர், அவரது காதலன் யுவராஜூக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்து உங்களிடம் ஏற்பட்ட தகராறில் தான் சுமித்ரா தற்கொலை செய்து கொண்டதாக கூறி உள்ளார். இதில் அதிர்ச்சிக்குள்ளான யுவராஜூம், அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அரியலூர் போலீசார் மூலம் தெரிய வந்தது. காதலர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Related News