தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காதலனை அடித்து விரட்டிவிட்டு இளம்பெண்ணை மிரட்டி கூட்டு பலாத்காரம்: 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அருகே பாலாற்றங்கரையில் தனியாக இருந்த காதல் ஜோடியில் காதலனை அடித்து விரட்டிவிட்டு, இளம்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்தது தொடர்பாக 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா ஒன்றியத்திற்குட்பட்ட நவ்லாக் பகுதியில் அரசு பண்ணைகள் இயங்கி வருகிறது. இந்த பண்ணை அருகே பாலாறு செல்கிறது. நேற்று முன்தினம் இரவு நவ்லாக் அருகே உள்ள பாலாற்றங்கரையையொட்டி ஒரு காதல் ஜோடி தனியாக பேசிக்கொண்டிருந்தனர்.

Advertisement

காதல் ஜோடி இருப்பதை பார்த்த 3 பேர், அங்கு சென்று அவர்களிடம் தகராறு செய்துள்ளனர். பின்னர் வாலிபரை அங்கிருந்து அடித்து துரத்திவிட்டு இளம்பெண்ணை மிரட்டி 3 பேரும் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. இதையடுத்து இளம்பெண் தனக்கு ேநர்ந்த பாலியல் கொடுமை குறித்து பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். இதுகுறித்து சிப்காட் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் ராணிப்பேட்டை போலீசார் சந்தேகத்தின் பேரில் 3 பேரை பிடித்தனர். அவர்களிடம் எஸ்பி அய்மன் ஜமால் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement