தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ராமநாதபுரத்தில் ரேபிஸ் நோயால் சிறுவன் உயிரிழப்பு; அப்பகுதியில் 127 பேருக்கு ரேபிஸ் தடுப்பூசி!

 

Advertisement

ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகராட்சி பகுதியில் ரேபிஸ் நோய்க்கு சிறுவர் உயிரிழந்ததை தொடர்ந்து, அப்பகுதியில் 127 பேருக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தி சுகாதாரத்துறையினர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ராமநாதபுரம் நகராட்சி அண்ணாநகர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவர், நகரில் உள்ள ஒரு இறைச்சி கடையில் வேலை பார்த்து வந்தார். அப்போது அவரை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தெருநாய் ஒன்று சிறுவரை கடித்துள்ளது. ஆனால் அவர் நாய் கடிக்கான ஊசிகள் போடாமல் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக உடல்நிலை மோசமாகி, அவரது நடவடிக்கையும் மாறியுள்ளது.

அதனையடுத்து அவரது பெற்றோர் ராமநாதபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர், ரேபிஸ் பாதிப்பு இருக்கலாம், உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல அறிவுறுத்தியுள்ளார். அதனையடுத்து செப். 23-ம் தேதி மதுரை அரசு மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்துவிட்டு, ரேபிஸ் இருப்பதை உறுதி செய்து, தனி வார்டில் அனுமதிக்கச் சொல்லியுள்ளனர். ஆனால் சிறுவனை அங்கு அனுமதிக்காமல், மருத்துவர்களுக்கு தெரியாமல் பெற்றோர் அழைத்து வந்துள்ளனர். இதனையடுத்து பட்டுக்கோட்டைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு உடல்நிலை மோசமடைந்ததும், ராமநாதபுரத்துக்கு அழைத்து வந்துள்ளனர். வரும் வழியில் அச்சிறுவர் கடந்த ஞாயிற்று கிழமை உயிரிழந்தார். அதனையடுத்து அவரது உடலை சுகாதாரத்துறைக்கு தெரியாமல் குடும்பத்தினர் தகனம் செய்துவிட்டனர். இதை அறிந்த ராமநாதபுரம் சுகாதாரத்துறையினர் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினர், அருகில் உள்ளவர்கள், அப்பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். மேலும், அப்பகுதியில் சுகாதாரத்துறையினர் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.

 

Advertisement

Related News