தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சைக்கிளில் சென்ற வாலிபர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற லாரியை காரில் விரட்டிப் பிடித்த நடிகை நவ்யா நாயர்

Advertisement

திருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகை நவ்யா நாயர் ஓணம் பண்டிகையை ஆலப்புழாவிலுள்ள தன்னுடைய வீட்டில் குடும்பத்தினருடன் கொண்டாடினார். இதன் பின்னர் கடந்த இரு தினங்களுக்கு முன் இவர் தன்னுடைய பெற்றோர், தம்பி ராகுல் மற்றும் மகன் சாய் கிருஷ்ணா ஆகியோருடன் ஆலப்புழாவிலிருந்து கொச்சிக்கு காரில் சென்றார். காரை நவ்யா நாயரின் தம்பி ராகுல் ஓட்டினார். ஆலப்புழா அருகே பட்டணக்காடு என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது முன்னால் சென்று கொண்டிருந்த ஹரியானா மாநில பதிவெண் கொண்ட ஒரு லாரி சைக்கிளில் சென்ற வாலிபர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த நடிகை நவ்யா நாயர் உடனடியாக அந்த லாரியை முந்திச் சென்று மடக்கிப் பிடிக்குமாறு தம்பி ராகுலிடம் கூறினார். உடனடியாக அவர் வேகமாக காரை ஓட்டிச் சென்று அந்த லாரியை மடக்கினார்.

இதற்கிடையே நவ்யா நாயர் நெடுஞ்சாலை போலீசுக்கு போன் செய்து விவரத்தை கூறினார். போலீசாரும் அங்கு விரைந்து சென்றனர். காயமடைந்த சைக்கிளில் சென்ற வாலிபரை மீட்டு உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. லாரி டிரைவரை கைது செய்த போலீசார், லாரியை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். சம்பவம் குறித்து நடிகை நவ்யா நாயர் கூறியது: கண்ணெதிரே ஒரு விபத்து நடந்து அதை கவனிக்காமல் சென்றால் விபத்தில் பாதிக்கப்படுபவர்கள் நிலை என்ன ஆகும் என்று நான் ஒரு கணம் சிந்தித்தேன். அதனால்தான் விரைந்து செயல்பட்டு போலீசுக்கு விவரத்தைக் கூறி விபத்தை ஏற்படுத்திய அந்த லாரியைப் பிடிக்க உதவினேன் என்றார்.

Advertisement

Related News