சைக்கிளில் சென்ற வாலிபர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற லாரியை காரில் விரட்டிப் பிடித்த நடிகை நவ்யா நாயர்
Advertisement
இதற்கிடையே நவ்யா நாயர் நெடுஞ்சாலை போலீசுக்கு போன் செய்து விவரத்தை கூறினார். போலீசாரும் அங்கு விரைந்து சென்றனர். காயமடைந்த சைக்கிளில் சென்ற வாலிபரை மீட்டு உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. லாரி டிரைவரை கைது செய்த போலீசார், லாரியை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். சம்பவம் குறித்து நடிகை நவ்யா நாயர் கூறியது: கண்ணெதிரே ஒரு விபத்து நடந்து அதை கவனிக்காமல் சென்றால் விபத்தில் பாதிக்கப்படுபவர்கள் நிலை என்ன ஆகும் என்று நான் ஒரு கணம் சிந்தித்தேன். அதனால்தான் விரைந்து செயல்பட்டு போலீசுக்கு விவரத்தைக் கூறி விபத்தை ஏற்படுத்திய அந்த லாரியைப் பிடிக்க உதவினேன் என்றார்.
Advertisement