தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சிறுவன் ஓட்டி வந்த கார் மோதி தொழிலாளி பரிதாப பலி: கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

கோவை: கோவையில் சிறுவன் ஓட்டி வந்த கார் மோதி தொழிலாளி பலியானார். சென்டர் மீடியனில் மோதி கார் தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேற்கு வங்க மாநிலம் ஜார் கிராம் நகரை சேர்ந்தவர் அக்சய் போரா (23). இவர் கோவை பீளமேடு பகுதியில் தங்கி கட்டிட வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு பீளமேடு போலீஸ் ஸ்டேஷன் அருகே மேம்பால தூண் பகுதியில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார் அக்சய் போரா மீது மோதியது.
Advertisement

தொடர்ந்து நிற்காமல் சென்ற கார் சென்டர் மீடியனில் ஏறிய நிலையில் தீப்பிடித்து எரிந்தது. காரில் இருந்த சிறுவன் கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைத்து லேசான காயத்துடன் அவரை மீட்டனர். கார் மோதியதில் அக்சய் போரா அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து கோவை கிழக்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். இதில், காரை ஓட்டி வந்தது சவுரிபாளையம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் என்பதும், தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருவதும் தெரியவந்தது. கார் ஓட்ட வேண்டும் என்ற ஆசையில் நள்ளிரவில் பெற்றோருக்கு தெரியாமல் சொகுசு காரை எடுத்து வந்ததாக தெரிகிறது. இது தொடர்பாக போலீசார் சிறுவனின் பெற்றோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Related News