தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நாட்றம்பள்ளி அருகே விளையாடியபோது குடத்தில் தலைசிக்கி பரிதவித்த சிறுவன்

*தீயணைப்புத்துறையினர் போராடி மீட்டனர்

Advertisement

ஜோலார்பேட்டை : நாட்றம்பள்ளி அருகே விளையாடிக்கொண்டிருந்தபோது திடீரென குடத்தில் தலை சிக்கிக்கொண்டு பரிதவித்த 4 வயது சிறுவனை தீயணைப்புத்துறையினர் போராடி மீட்டனர்.திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த ஆத்துக்குப்பம் ஊராட்சி சங்கலாபுரத்தில் உள்ள ஒரு பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார்.

இவரது மனைவி அருணா. இவர்களது மகன் ரக்‌ஷிதன் (4). இந்நிலையில் நேற்று மாலை சிறுவன் தனது வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது அங்கிருந்த ஸ்டீல் குடத்தை கவிழ்த்து தனது தலையில் வைத்து விளையாடியபோது எதிர்பாராமல் சிக்கிக்கொண்டது.

இதனால் பயந்துபோன சிறுவன் அலறியபடி கூச்சலிட்டான். சத்தம் கேட்ட அவரது பெற்றோர் ஓடி வந்து தலையில் சிக்கிய குடத்தை வெளியே எடுக்க முயன்றனர். இதேபோல் அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அவர்களும் மீட்க முயன்றனர். இருப்பினும் முடியவில்லை.

இதையடுத்து நாட்றம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் அரைமணி நேரம் போராடி ஸ்டீல் குடத்தை துண்டித்து சிறுவனை மீட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement

Related News