தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அஞ்சுகிராமம் அருகே இறந்தவர் உடலை அடக்கம் செய்ய இரு தரப்பினர் முயற்சி

*2 சவப்பெட்டிகள் வந்ததால் பரபரப்பு

Advertisement

அஞ்சுகிராமம் : அஞ்சுகிராமம் அருகே இறந்தவர் உடலை அடக்கம் செய்வது குறித்து இரு தரப்பினரிடையே பிரச்னை ஏற்பட்டது. ஒரு உடலுக்கு 2 சவப்பெட்டிகள் எடுத்து வந்ததால் போலீஸ் குவிக்கப்பட்டு பரபரப்பு ஏற்பட்டது.

அஞ்சுகிராமம் அருகே அழகப்பபுரத்தைச் சேர்ந்தவர் அன்பழகன்(50) தொழிலாளி. இவரது மனைவி ஜெயா. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இந்நிலையில் அன்பழகன் உடல் நலக்குறைவால் இறந்து போனார். அவரது உடலை அடக்கம் செய்ய மனைவி ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அன்பழகனுக்கு குழந்தை இல்லாததால் அவரது சகோதர, சகோதரிகளும் தனியே உடலை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது. மேலும் இருதரப்பினரும் இறந்தவரை அடக்கம் செய்ய ஆளுக்கொரு சவப்பெட்டியை எடுத்து வந்துள்ளனர். இந்த போட்டியால் அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.

இதையடுத்து அந்தப் பகுதியில் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க எஸ்பி உத்தரவின் பேரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு பாதுகாப்பிற்காக அஞ்சுகிராமம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பிரிய ராஜ்குமார், கன்னியாகுமரி காவல் நிலைய உதவி ஆய்வாளர் எட்வர்ட் பிரைட் ஆகியோர் தலைமையிலான போலீசார் மற்றும் அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டனர்.

போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.இதில் மனைவியிடம் அன்பழகன் உடலை ஒப்படைப்பது என முடிவு செய்யப்பட்டது.இடையடுத்து அன்பழகன் உடல் போலீசார் முன்னிலையில் பங்கு கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இதனால் சுமார் 5 மணி நேரம் இழுபறியாக நீடித்து வந்த பிரச்னை முடிவுக்கு வந்தது.

Advertisement

Related News