தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

எல்லை பிரச்னையை பெரிதுபடுத்தாமல் வர்த்தக உறவை வலுப்படுத்துவோம்: இந்தியாவுக்கு சீன தூதர் அழைப்பு

புதுடெல்லி: சீன-இந்திய உறவில் எல்லைப் பிரச்னையை பெரிதுபடுத்தாமல், நட்புறவு மற்றும் வர்த்தக ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும் என இந்தியாவிற்கான சீன தூதர் தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் சீனா இடையேயான தூதரக உறவுகள் தொடங்கி 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே லடாக் எல்லைப் பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில், சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்டதன் 76வது ஆண்டு விழா டெல்லியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய இந்தியாவிற்கான சீன தூதர் ஸு ஃபெய்ஹாங், இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து முக்கிய கருத்துக்களை முன்வைத்தார்.

Advertisement

அவர் தனது உரையில், ‘சீனா மற்றும் இந்தியா இடையேயான தூதரக உறவுகள் நிறுவப்பட்டு இந்த ஆண்டுடன் 75 ஆண்டுகள் நிறைவடைகிறது. கடந்த 75 ஆண்டுகளில், உறவில் பல ஏற்றத்தாழ்வுகள் இருந்தபோதிலும், நட்புறவே பிரதானமாக வரையறுத்துள்ளது. சமீபத்தில், சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் நடத்திய சந்திப்பு, சீன-இந்திய உறவுகளை புதிய கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது. இரு தலைவர்களின் வழிகாட்டுதலின்படி, இந்திய தரப்புடன் இணைந்து செயல்பட தயாராக இருக்கிறோம். கடந்த காலங்களில் இருந்து வந்த எல்லைப் பிரச்னை, தற்போதைய சீன-இந்திய உறவுகளை வரையறுக்க அனுமதிக்கக் கூடாது.

குறிப்பிட்ட வேறுபாடுகள் இருதரப்பு ஒத்துழைப்பை பாதிக்கக் கூடாது. இந்த ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை, இருதரப்பு வர்த்தகம் 10.4% அதிகரித்து 102 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியுள்ளது. திபெத்தில் உள்ள புனித மலை மற்றும் ஏரிக்கு இந்திய யாத்ரீகர்கள் பயணம் மேற்கொள்வதை சீனா மீண்டும் தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி வரை, 2 லட்சத்து 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசாக்கள் இந்திய குடிமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன’ என்றார்.

கடந்த 75 ஆண்டுகளில், உறவில் பல ஏற்றத்தாழ்வுகள் இருந்தபோதிலும், நட்புறவே பிரதானமாக வரையறுத்துள்ளது. சமீபத்தில், சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் நடத்திய சந்திப்பு, சீன-இந்திய உறவுகளை புதிய கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

Advertisement

Related News