தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பொறையாறு அருகே 40 ஆண்டுகளாக இயங்கி வந்த மார்க். கம்யூ அலுவலகம் இடிப்பு

*தடுத்து நிறுத்திய கட்சியினர்
Advertisement

தரங்கம்பாடி : மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே திருவிளையாட்டத்தில் உள்ள சிபிஎம் அலுவலகத்தை வருவாய்துறையினர், நெடுஞ்சாலைதுறையினர் இடிக்க முற்பட்ட போது கட்சி தொண்டர்கள் தடுத்து நிறுத்தினர்.திருவிளையாட்டம் கடைவீதியில் ஒரு கட்டிடத்தில் 40 ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் இயங்கி வருகிறது.

அந்த இடம் ஆக்கிரமிப்பு செய்யபட்டிருப்பதாக கூறி வருவாய்துறை, நெடுஞ்சாலைதுறை மற்றும் போலீசார் தரங்கம்பாடி தாசில்தார் மகேஷ் தலைமையில் நேற்று காலை திடீரென வந்து ஜேசிபி மூலம் இடிக்க முற்பட்டனர். இதனை தடுத்த கட்சி தொண்டர்களையும் அப்பறபடுத்தினர்.

தகவல் அறிந்து சிபிஎம் மாவட்ட செயலாளர் சீனிவாசன் மற்றும் கட்சி தொண்டர்கள் திரண்டனர். கட்சி அலுவலகத்தை இடிக்க கூடாது என்று கடுமையாக ஆட்சேபித்தனர். அந்த இடம் குறித்து உயர்நீதிமன்றத்தில் சீராய்வு மனு விசாரணையில் உள்ளது. நீதிமன்ற அனுமதி இன்றி இடிக்க கூடாது என்று ஆட்சேபித்தனர்.

அதை தொடர்ந்து இடிப்பதை கைவிட்டு வருவாய்துறையினரும், நெடுஞ்சாலைதுறையினரும் அந்த இடத்தை விட்டு வெளியேறினர்.உடனடியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இடிக்கபட்ட இடத்தில் கீற்றுகளால் அடைத்து அலுவலகத்தை சரி செய்தனர். இதே போல் இதற்கு முன்பு இரண்டு முறை இடிக்க வந்து வருவாய்துறையினரும் நெடுஞ்சாலைதுறையினரும் திரும்பி சென்றது குறிப்பிடதக்கது.

Advertisement

Related News