தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

பூதப்பாண்டி அருகே 200 அடி உயர மலையில் ஏறி கொத்தனார் தற்கொலை மிரட்டல்

*தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்

பூதப்பாண்டி : பூதப்பாண்டி அருகே 200 அடி உயர மலையில் ஏறி நின்று கொத்தனார் தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அடுத்துள்ள கேசவன்புதூர் பகுதியை சேர்ந்தவர் மணிகுமார் (43). கொத்தனார். இவருக்கு திருமணமாகி மனைவி, ஒரு மகள் உள்ளனர். இவரது மனைவி டெய்லராக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினர் தற்போது எட்டாமடையில் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று மீண்டும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் கோபம் அடைந்த மணிகுமார் எட்டாமடை பகுதியிலுள்ள சுமார் 200 அடி உயரம் உள்ள ஒரு மலை மீது ஏறினார். பின்னர் அவர் நான் கீழே குதித்து தற்கொலை செய்ய போவதாக கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த கீழே நின்றவர்கள் உடனடியாக நாகர்கோவில் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் மணிகுமாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் மாற்று வழியாக சென்று மலையில் நின்ற மணிகுமாரை மீட்டு பத்திரமாக கீழே இறக்கினர். பின்னர் அவரை பூதப்பாண்டி காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசாரிடம் ஒப்படைத்தனர். மலை மீது நின்று கொத்தனார் தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related News