தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ரூ.20க்கு ‘ஜனதா கானா’ முன்பதிவு செய்யாத பயணிகளுக்கு மலிவு விலையில் உணவு: தெற்கு ரயில்வேயில் அறிமுகம்

சென்னை: தெற்கு ரயில்வேயில் ரூ.20க்கு ‘ஜனதா கானா’ திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நகரின் பல ரயில் நிலையங்களில் ‘ஒன் ஸ்டேஷன் ஒன் தயாரிப்பு’ ஸ்டால்கள் மூலம் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் தெற்கு ரயில்வே, இப்போது முன்பதிவு செய்யாத பயணிகளுக்கு மலிவு விலையில் உணவு வழங்கும் ‘ஜனதா கானா’ திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

Advertisement

‘ஒன் ஸ்டேஷன் ஒன் தயாரிப்பு’ ஸ்டால்களின் வெற்றியைத் தொடர்ந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த சிக்கன உணவுத் திட்டத்தின் முக்கிய நோக்கம், முன்பதிவு செய்யாத பயணிகள் நடைமேடையை விட்டு வெளியேறாமலேயே ரூ.20 மலிவு விலையில் உணவு வாங்குவதை சாத்தியமாக்குவதாகும். இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரி தெரிவித்ததாவது:

விற்பனையாளர்கள் மூலம் விற்கப்படும் இந்த உணவு, சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, அரக்கோணம் சந்திப்பு மற்றும் காட்பாடி உள்ளிட்ட 27 ரயில் நிலையங்களில் தற்போது கிடைக்கிறது. பாரம்பரிய ஜவுளி மற்றும் கைவினைப் பொருட்களுடன், ஆரோக்கியமான விவசாய உணவுகளை விற்பனை செய்து உள்ளூர் தயாரிப்புகளை ஊக்குவிக்கும் ‘ஒன் ஸ்டேஷன் ஒன் தயாரிப்பு’ கடைகள், புறநகர் ரயில் பயணிகளிடமிருந்து நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

தெற்கு ரயில்வே நகரம் முழுவதும் 62 நிலையங்களில் 84 கடைகள் செயல்பட அனுமதித்துள்ளது. இந்த கடைகளில் பாரம்பரிய சிற்றுண்டிகள், காஞ்சிபுரம் பட்டு புடவைகள் மற்றும் கைவினைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ‘ஒன் ஸ்டேஷன் ஒன் தயாரிப்பு’ மற்றும் சிக்கன உணவுத் திட்டத்துடன் கூடுதலாக, வார இறுதி நாட்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும் ரயில் நிலையங்களில் தெற்கு ரயில்வே தற்காலிக கடைகளை தொடங்கியுள்ளது. நெரிசலான சில நிலையங்களில் இந்த முயற்சி தற்போது சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றார்.

Advertisement