தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: பல்லாவரத்தில் பரபரப்பு

 

Advertisement

பல்லாவரம்: உத்திரபிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி தமிழகத்திலும் செயல்பட்டு வருகிறது. இக்கட்சியின் தமிழ்நாடு மாநில தலைமை அலுவலகம் பல்லாவரம் கன்டோன்மென்ட், வெட்டேரன் லைன்ஸ் பகுதியில் அமைந்துள்ளது. இந்நிலையில், நேற்று காலை 8.30 மணியளவில் தாம்பரம் காவல் ஆணையரக கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட மர்ம நபர், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைமை அலுவலகத்தில் வெடிகுண்டு இருப்பதாகவும், சற்று நேரத்தில் அது வெடித்து விடும் என்றும் கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார்.

அதன்பேரில், விரைந்து சென்ற பல்லாவரம் போலீசார், வெடிகுண்டு நிபுணர்களின் உதவியுடன் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைமை அலுவலகத்தில் ஆய்வு செய்தனர். ஆனால், வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இதனால், இது புரளி என்பது தெரிந்தது. மிரட்டல் விடுத்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

 

Advertisement