தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாம்பன் பாலத்தில் ஸ்பிரிங் பிளேட்டுகள் சேதம்: வாகனங்களின் டயர்களை பதம் பார்ப்பதால் விபத்து அபாயம்

ராமேஸ்வரம்: பாம்பன் சாலை பாலத்தில் இணைப்பு ஸ்ப்ரிங் பிளேட்டுகள் சேதமடைந்துள்ளதால், வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அருகே, பாம்பன் மற்றும் மண்டபத்திற்கு இடையே கடல் பகுதியை இணைக்கும் பாலம் உள்ளது. இப்பாலம் அன்னை இந்திரா காந்தி சாலைப் பாலம் என அழைக்கப்படுகிறது. பாலத்தின் மீது வாகனங்கள் செல்லும்போது, அதிர்வுகளை தடுக்கும் வகையில், சாலை இணைப்பு பகுதியில் இரும்பினாலான ஸ்பிரிங் பிளேட்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், ஸ்பிரிங் பிளேட்கள் அவ்வப்போது சேதமடைந்து, வாகனங்களின் டயர்களை பதம் பார்த்து வருகின்றன. கடந்தாண்டு சாலைப் பாலத்தில் சேதமடைந்த இரும்பு ஸ்பிரிங் பிளேட்களை தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் சரிசெய்தனர்.
Advertisement

இந்நிலையில், சாலை பாலத்தில் பொருத்தப்பட்டுள்ள இரும்பு ஸ்பிரிங் பிளேட்கள் மீண்டும் சேதமடைந்து போல்ட், நட்டுகள் கழன்று கிடக்கின்றன. இவைகள் வாகனங்களின் டயர்களை பஞ்சராக்குகின்றன. சில நேரங்களில் விபத்துக்கும் வழி வகுக்குகின்றன. அரசு பஸ்கள் செல்லும்போது பலத்த சத்தம் ஏற்படுவதால் பயணிகள் அதிர்ச்சி அடைகின்றனர். எனவே, பாம்பன் பாலத்தில் சேதமடைந்துள்ள இரும்பு ஸ்பிரிங் பிளேட்டுகளை சீரமைக்க, தேசிய நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement