தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சென்னை விமான நிலையத்திற்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல்

சென்னை: சென்னை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று அதிகாலை ஒரு மர்ம இ-மெயில் வந்தது. அதில், சென்னை விமான நிலையத்தில் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. வெடிகுண்டுகள் இன்று (நேற்று) காலை வெடித்து சிதறும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதையடுத்து சென்னை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து, விமான நிலைய இயக்குனர் அலுவலகத்திற்கு அவசர தகவல் தெரிவிக்கப்பட்டது. நேற்று அதிகாலை, சென்னை விமான நிலைய நிர்வாக அலுவலகத்தில், விமான நிலைய பாதுகாப்பு குழுவின் அவசரக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் சென்னை விமான நிலைய உயர் அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள், வெடிகுண்டு நிபுணர்கள், விமான நிறுவன அதிகாரிகள், மத்திய தொழில் பாதுகாப்பு அதிகாரிகள், பிசிஏஎஸ் அதிகாரிகள், மத்திய உளவுப் பிரிவு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement

அதோடு சென்னை விமான நிலையம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் தீவிர வெடிகுண்டு சோதனைகளை நடத்த முடிவெடுக்கப்பட்டது. அதன்படி நேற்று காலை வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் உதவியுடன் தீவிர சோதனை நடத்தினர். அதிரடி படையினர், பாதுகாப்பு படையினர் ஆகியோரும் சோதனையில் ஈடுபட்டனர்.இந்த வெடிகுண்டு சோதனைகள் நீண்ட நேரம், சென்னை விமான நிலையத்தில் நடந்தது. ஆனால் சந்தேகப்படும்படியான பொருட்கள் எதுவும் இல்லை. இதையடுத்து இது வழக்கமான புரளி என்று முடிவு செய்யப்பட்டது.

Advertisement