தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

34 வாகனங்களில் மனித குண்டு சுற்றிவருவதாக மிரட்டல்: மும்பைக்கு ரெட் அலர்ட்

 

Advertisement

மும்பை: 14 பயங்கரவாதிகள் மும்பைக்குள் நுழைந்திருப்பதாகவும் 34 வாகனங்களில் மனிதகுண்டுகள் நகரை சுற்றி வருவதாகவும் மிரட்டல் வந்ததை அடுத்து மும்பை போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். விநாயகர் சதுர்த்தி விழாவின் இறுதி நாளான இன்று சிலைகளை கரைக்கும் அனந்த் சதுர்த்தி விழா மும்பையில் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.

ஆயிரக்கணக்கானோர் திரண்டு கணபதி சிலைகளை ஊர்வலமாக கொண்டு சென்று நீர்நிலைகளில் கரைப்பார்கள். நகரம் முழுவதும் இன்று விழாக் கோலம் பூண்டிருக்கும் என்பதால் மும்பையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. அசம்பாவித சம்பவங்களைத் தடுக்க நகரில் சுமார் 21 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆங்காங்கே சோதனை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மும்பை போக்குவரத்து காவல் கட்டுப்பாட்டு அறையின் வாட்ஸ் அப் ஹெல்ப்லைன் எண்ணிற்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அதில் மும்பையில் 14 பயங்கரவாதிகள் நுழைந்துள்ளனர். 34 வாகனங்களில் மனிதகுண்டுகள் சுமார் 400 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிமருந்துகளுடன் சுற்றி வருவதாகவும் அது வெடித்தால் நகரையே அதிரச் செய்யும் எனவும் குறிப்பிடப்பட்டது. ‘லஷ்கர்-இ-ஜிஹாதி’ என்ற அமைப்பின் பெயரில் இந்த மிரட்டல் செய்தி அனுப்பப்பட்டது.

இதையடுத்து உடனடியாக போலீசார் முக்கியமான அனைத்து இடங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்தினர். நகரம் முழுவதும் சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர். போலீசார் முழு விழிப்புடன் செயல்பட்டு வருவதாகவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் போலீசார் கேட்டுக் கொண்டனர்.

Advertisement