தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாலிவுட்டை 50 ஆண்டாக கலக்கிய காமெடி நடிகர் அஸ்ராணி மரணம்: தீபாவளி வாழ்த்து கூறிவிட்டு உயிர் பிரிந்தது

மும்பை: புகழ்பெற்ற மூத்த நகைச்சுவை நடிகர் அஸ்ராணி, உடல்நலக்குறைவு காரணமாக தனது 84வது வயதில் காலமானார். இந்திய திரையுலகின் மூத்த நடிகரான கோவர்தன் அஸ்ராணி (84), தனது தனித்துவமான நகைச்சுவை நடிப்பால் கோடிக்கணக்கான ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். குறிப்பாக, 1975ல் வெளியான ‘சோலே’ திரைப்படத்தில் அவர் ஏற்று நடித்த ‘ஆங்கிலேயர் காலத்து ஜெயிலர்’ கதாபாத்திரம் இன்றுவரை மக்கள் மனதில் நிலைத்து நிற்கிறது.

Advertisement

கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் பயணித்த அவர், 350க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். கடந்த சில காலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அஸ்ராணிக்கு, சமீபத்தில் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு மும்பை ஜுஹுவில் உள்ள பாரதிய ஆரோக்ய நிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது ‘நுரையீரலில் நீர் சேர்ந்திருப்பதாக’ அவரது மேலாளர் பாபுபாய் திபா தெரிவித்திருந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிர் பிரிந்தது.

மறைவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு கூட, சமூக வலைதளம் மூலம் தனது ரசிகர்களுக்கு அவர் தீபாவளி வாழ்த்து தெரிவித்திருந்தது அனைவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ‘தனது இறுதிப் பயணம் அமைதியாக நடைபெற வேண்டும்’ என்ற அவரது கடைசி விருப்பத்தின்படியே, இறுதிச்சடங்குகள் மும்பை சாந்தாகுரூஸ் மின்மயானத்தில் குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் மிகவும் எளிமையாக நடைபெற்றன.

Advertisement

Related News