தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாலிவுட் நடிகை போல கட்டழகு உடல் வேண்டும் தினமும் மனைவியை சித்ரவதை செய்த ஆசிரியர்: உபி பெண் போலீசில் புகார்

காஸியாபாத்: உபி மாநிலம் காஸியாபாத்தை சேர்ந்த இளம் பெண் ஷானவி தன்னுடைய கணவர் சிவம் உஜ்வால் மீது போலீசில் புகார் அளித்துள்ளார். அதில், கடந்த 6 மாதங்களுக்கு முன் எனக்கும் சிவம் உஜ்வாலுக்கும் திருமணம் நடந்தது. சிவம் உஜ்வால் அரசு பள்ளியில் உடல்கல்வி ஆசிரியராக உள்ளார். நான் குண்டாகவும், அசிங்கமாகவும் இருப்பதாக கணவர் கூறுகிறார்.

Advertisement

பாலிவுட் நடிகை நோரா பதேஹி போல் நல்ல உடலமைப்பு பெற வேண்டும் என கூறி தினமும் 3 மணி நேரம் உடற்பயிற்சி செய்யுமாறு கணவர் கட்டாயப்படுத்துகிறார். இதனால் தினமும் உடல் பயிற்சி செய்கிறேன். உடல் நல பிரச்னையால் ஒரு நாள் உடற்பயிற்சி செய்ய தவறினாலும் சாப்பாடு போடாமல் பட்டினி போட்டுவிடுகிறார். கையில் கிடைத்த பொருட்களை எடுத்து அடிக்கிறார். இதனால் மனமுடைந்து எனது தாய் வீட்டுக்கு சென்றேன்.

கணவர் வீட்டில் நடந்தவற்றை பெற்றோரிடம் சொல்லி அழுதேன். பெற்றோர் சமாதானப்படுத்தி மீண்டும் கணவர் வீட்டுக்கு அனுப்பினர். ஆனால் அங்கு சென்ற போது மேலும் வரதட்சணை கொண்டு வருமாறு விரட்டி விட்டனர். எனக்கு விருப்பம் இல்லாத விஷயங்களை கணவர் செய்ய சொல்கிறார். அவர் நிறைய ஆபாச படங்களை பார்க்கிறார். ஏற்கனவே ரூ.24 லட்சம் மதிப்புள்ள கார் மற்றும் ரூ.10 லட்சம் ரொக்கம் வரதட்சணை கொடுக்கப்பட்டுள்ளது. கூடுதலாக வரதட்சணை வாங்கி வருமாறு மாமியார் கட்டாயப்படுத்துகிறார்.

இதனால் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார். இந்த புகார் பற்றி காஸியாபாத் உதவி ஆணையர் சலோனி அகர்வால்,‘‘ மாமியார் வீட்டில் பல்வேறு வகைகளில் துன்புறுத்தல் அளிக்கின்றனர். மனைவியிடம் சிலவற்றை எதிர்பார்ப்பதாகவும் அதனால் பயிற்சிகளை மேற்கொள்ளுமாறு கணவர் வற்புறுத்துகிறார். குறித்த நேரத்தில் உணவு தர மறுக்கின்றனர் என்று புகாரில் அந்த பெண் தெரிவித்துள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறோம்’’ என்றார்.

Advertisement

Related News