தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மூணாறு பகுதியில் பூத்துக் குலுங்கும் நீலக்குறிஞ்சி பூக்கள்: போட்டோ, செல்பி எடுத்து பயணிகள் உற்சாகம்

மூணாறு: மூணாறு பகுதியில் நீலக்குறிஞ்சிப் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. இவைகளை போட்டோ, செல்பி எடுத்து சுற்றுலாப் பயணிகள் உற்சாகம் அடைகின்றனர். கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், மூணாறு பகுதியில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குறிஞ்சி மலர்கள் பூக்கும். இந்த மலர்களில் 64 வகைகள் உள்ளன. இவைகள் கூட்டம் கூட்டமாக பூக்கும். இவற்றில் நீலக்குறிஞ்சி மலர் ஒரு வகையாகும். இவை வெளிர் ஊதா மற்றும் நீல நிறத்தில் காணப்படும். மழையில்லாத நிலையில் 3 மாதம் வரை குறிஞ்சி மலர்கள் பூக்கும். நீலக்குறிஞ்சி மலர்கள் பெரும்பாலும் தென்னிந்தியாவின் சோலை வனங்களில் கடல் மட்டத்திலிருந்து 1,300 முதல் 2,400 மீட்டர் உயரத்தில் பூக்கின்றன.

Advertisement

இதற்கு முன்பு கடந்த 2005ல் மூணாறு ராஜமலை பகுதியில் நீலக்குறிஞ்சி பூக்கள் பூத்துக் குலுங்கின. இவற்றை காண்பதற்கு உலகம் முழுவதும் இருந்து சுற்றுலாப்பயணிகள் வருகை தந்தனர். அதன்பின்னர் கடந்த 2018ல், நீலக்குறிஞ்சி வசந்தம் பெரிய அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்போது பெய்த பலத்த மழை காரணமாக நீலக்குறிஞ்சி மலர்கள் சரியாக பூக்கவில்லை. குறிஞ்சிப் பூ சீசன் முடிந்து 7 ஆண்டுகள் கடந்த நிலையில், இந்தாண்டு மூணாறில் நீலக்குறிஞ்சி மலர்கள் பூக்க தொடங்கியுள்ளன. குறிப்பாக மூணாறு அருகே உள்ள இக்கா நகர் கிரஹாம்ஸ் லேண்ட், மூணாறு பொறியியல் கல்லூரிச் சாலை, மாட்டுப்பட்டி அணை ஆகிய பகுதிகளில் நீலக்குறிஞ்சி மலர்கள் பூத்து குலுங்குகின்றன.

தற்போது சில செடிகளில் மட்டுமே பூத்துள்ளன. வரும் நாட்களில் கூடுதல் செடிகளில் குறிஞ்சி மலர்கள் பூக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தற்போது பூத்து குலுங்கும் நீல குறிஞ்சி மலர்கள் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன.

Advertisement

Related News