தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கருப்புப் பண விவகாரம்; கேரள முதல்வர் மகனுக்கு அமலாக்கத்துறை சம்மன்

திருவனந்தபுரம்: கருப்புப் பண விவகாரத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயனின் மகன் விவேக் கிரணுக்கு கடந்த இரு வருடங்களுக்கு முன் ஈடி சம்மன் அனுப்பியும் அவர் இதுவரை விசாரணைக்கு ஆஜராகவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது .கேரளாவில் கடந்த 2018ல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக வடக்காஞ்சேரி என்ற இடத்தில் லைப் மிஷன் என்ற திட்டத்தின் கீழ் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டது. இந்தக் குடியிருப்பை ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ரெட் கிரசென்ட் என்ற தன்னார்வ அமைப்பு இலவசமாக கட்டிக் கொடுக்க முன்வந்தது.

Advertisement

இதற்கான ஒப்பந்தப் பணிகளை பெறுவதற்காக ஒரு கட்டிட நிறுவனம், முதல்வர் பினராயி விஜயனின் அப்போதைய முதன்மை செயலாளர் சிவசங்கரன் மற்றும் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தில் பணிபுரிந்த அதிகாரிகளுக்கு லஞ்சமாக ரூ. 4.40 கோடி பணம் கொடுத்ததாக புகார் எழுந்தது.இது தொடர்பாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. விசாரணையில் இந்த விவகாரத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயனின் மகன் விவேக் கிரணுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

லைப் மிஷன் திட்டத்தின் மூலம் இவர் கருப்புப் பணத்தை முதலீடு செய்திருக்கலாம் என்று அமலாக்கத் துறைக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதுதொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறி கடந்த 2023ம் ஆண்டு விவேக் கிரணுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனால் இதுவரை அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இந்தத் தகவல் இப்போதுதான் வெளியாகி உள்ளது.

Advertisement