தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கருங்கல் அருகே கோயில் நிலத்தில் ஆக்ரமிப்பு அகற்றம்

*பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு

கருங்கல் : கருங்கல் அருகே உதயமார்த்தாண்டம் பகுதியில் தெய்வ விநாயகர் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு சொந்தமான பல ஏக்கர் நிலங்கள் பல்வேறு இடங்களில் உள்ளது. இதில் உதயமார்த்தாண்டம் பகுதியில் உள்ள நிலத்தை குறிப்பிட்ட சிலர் ஆக்ரமித்து வைத்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து சம்பந்தப்பட்ட நபர்களுக்கு இந்து அறநிலையத்துறை சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. ஆனால் ஆக்ரமிப்பை காலி செய்யவில்லை. இதையடுத்து அறநிலையத்துறையினர் நீதிமன்றத்தை அணுகினர். நீதிமன்றம் ஆக்ரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது.

நேற்று உதயமார்த்தாண்டம் பகுதியில் இரண்டு இடங்களில் இருந்த ஆக்ரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் வந்தனர். ஒருவர் கோயில் நிலத்தில் கடை வைத்திருந்தார். அவர் கடையை காலி செய்தார். இதையடுத்து அதிகாரிகள் கடையை பூட்டி சீல் வைத்தனர்.

தேவதாஸ் என்பவர் கோயில் நிலத்தில் வீடு கட்டியுள்ளார். வீட்டை காலி செய்ய அதிகாரிகள் வந்தபோது தேவதாஸ் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் ஆக்ரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து, கால அவகாசம் கேட்டு போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து அறநிலையத்துறை தனி வட்டாட்சியர் அனில்குமார் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் ஒரு வாரம் அவகாசம் வழங்கப்பட்டது. அதற்குள் காலி செய்யவேண்டும் இல்லை என்றால் காலி செய்து சீல் வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதை தேவதாஸ் தரப்பினர் ஏற்றுக்கொண்டனர். இதையடுத்து அதிகாரிகள் திரும்பி சென்றனர்.