தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சட்டமன்ற தொகுதி வாரியாக வரும் 5ம் தேதி முதல் ஆர்ப்பாட்டம்: பாஜக மாநில செயலாளர் அறிவிப்பு

சென்னை: சட்டமன்ற தொகுதி வாரியாக வரும் 5ம் தேதி முதல் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி.செல்வம் அறிவித்துள்ளார். தமிழக பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி.செல்வம் தி.நகரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று அளித்த பேட்டி: மாணவர்களின் கல்விக் கடன் ரத்து செய்யப்படும். அரசுத் துறைகளில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டு, 3.5 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும், புதிய ஓய்வூதியத் திட்டம் கைவிடப்பட்டு பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வரப்படும். தமிழகத்தில் பணியாற்றும் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களை அரசுப் பணியாளர்களாகப் பணியமர்த்தி காலமுறை ஊதியம் வழங்கப்படும். பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்றெல்லாம் தேர்தல் வாக்குறுதியில் கூறினர்.

Advertisement

அதேபோல, மாதம் ஒருமுறை மின் கட்டணத்தை கணக்கிடும் முறை கொண்டுவரப்படும் என்றும், சிலிண்டருக்கு தமிழக அரசு சார்பாக ரூ.100 மானியம் வழங்கப்படும் என்றும் அறிவித்தனர். மாறாக மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வு நடவடிக்கைகளை அரசு செய்து வருகின்றது. தொகுதி அளவில் ஏற்படுத்தப்பட்டு இருக்கக்கூடிய பிரதான பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு காண வலியுறுத்தி தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ அறிவுறுத்தலின்படி சட்டமன்ற வாரியாக ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட உள்ளது. வருகிற அக்டோபர் 5ம் தேதி தொடங்கி நவம்பர் 30ம் தேதி வரையிலும் இந்த ஆர்ப்பாட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement