தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ராகுல் கேள்விக்கு பாஜ பதிலளிப்பது மேட்ச் பிக்சிங்கை உறுதி செய்கிறது: காங்கிரஸ் கருத்து

மும்பை: மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் மேட்ச் பிக்சிங் நடந்ததாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக பாஜ தலைவர்கள் பலரும் ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்தனர். இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதலா கூறியிருப்பதாவது: தேர்தல் ஆணையத்தின் சார்பாக பாஜ தலைவர்கள் பதிலளிக்கின்றனர். இது கவலை அளிக்கிறது. தேர்தலில் மேட்ச் பிக்சிங் நடந்ததை இது உறுதிப்படுத்துகிறது. ராகுல் காந்தியின் கேள்விகளுக்கு நியாயமாக தேர்தல் ஆணையம்தான் பதிலளித்திருக்க வேண்டும்.

சட்டப்பேரவை தேர்தல்களில் நடக்கும் சில சம்பவங்கள் தற்செயலானவை அல்ல, அவை கவனமாக திட்டமிடப்பட்ட நடவடிக்கை. அரியானா சட்டப்பேரவை தேர்தல்கள் தொடர்பான சிசிடிவி காட்சிகளை வெளியிட சண்டிகர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட போது, ஒன்றிய பாஜ அரசு தேர்தல் ஆணையத்தின் உதவியுடன் விதிகளை மாற்றி அந்த தகவலை வெளியிட விடாமல் தடுத்தது ஏன்? மகாராஷ்டிராவில் மக்களவை தேர்தலில் காங்கிரசும் அதன் கூட்டணி கட்சிகளும் அமோக வெற்றி பெற்றன. அடுத்த 5 மாதத்தில் எப்படி முடிவுகள் மாறின. இவ்வாறு அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.