தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உறவாடி கெடுப்பது பாஜகவின் மாடல்: செல்வப்பெருந்தகை காட்டம்

மதுரை: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை மதுரை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: தியாகி இமானுவேல் சேகரனுக்கு புகழஞ்சலி செலுத்துவதில் காங்கிரஸ் பேரியக்கம் பெருமை அடைகிறது. சி.பி.ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதியாக பதவியேற்பதில் நாட்டுக்கு என்ன பெருமை இருக்கிறது. சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு திருட்டு நடந்ததை போல், துணை ஜனாதிபதி தேர்தலிலும் வாக்கு திருட்டு நடந்திருக்கிறதா என தெரியவில்லை.

Advertisement

இதை பிரதமர்தான் சொல்ல வேண்டும். அதிமுகவை உடைக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை என நயினார் நாகேந்திரன் கூறியது குறித்த கேள்விக்கு, ‘அவர் உலக அதிசயமான வார்த்தையை பேசி இருக்கிறார். மகாராஷ்டிராவில் சிவசேனாவை இரண்டாக உடைத்து ஷிண்டே சிவசேனாவை உருவாக்கியது பாஜக. அதன்பின் ஷிண்டே சிவசேனாவை ஓரங்கட்டி பாஜகவை சேர்ந்தவர் முதல்வராக்கப்பட்டுள்ளார்.

உறவாடி கெடுப்பது பாஜகவின் மாடல். ஆமை புகுவதைப் போல பாஜக புகும் மாநிலம் சிதைந்து போகும். மக்கள் அதிகாரம், திட்டத்தில் கை வைத்து, மக்களுக்கு சேர வேண்டிய அனைத்தையும் அம்பானி, அதானியிடம் பாஜவினர் கொடுத்து விடுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Related News