தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சொந்த காங்கிரஸ் அரசை விமர்சித்த துணை முதல்வரின் வீட்டிற்கே சென்று சந்தித்த பாஜக தேசிய தலைவர்: இமாச்சல பிரதேச அரசியலில் பரபரப்பு

 

Advertisement

சிம்லா: இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் அரசை துணை முதல்வர் விமர்சித்த நிலையில், பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா அவரை நேரில் சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்து 3 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி மண்டி நகரில் நேற்று விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட துணை முதல்வர் முகேஷ் அக்னிஹோத்ரி, மேடையில் ஆவேசமாகப் பேசினார். அதிகாரிகளை எச்சரிக்கும் வகையிலும், சொந்தக் கட்சித் தலைமையிலான அரசையே மறைமுகமாக விமர்சிக்கும் தோணியிலும் அவரது பேச்சு அமைந்திருந்தது. குறிப்பாக, முதல்வர் சுக்விந்தர் சிங் சுகுவுக்கு நிர்வாகம் தொடர்பாகக் கடும் செய்தி விடுக்கும் வகையில் அவர் பேசியது ஆளும் கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்தச் சூழலில், சிம்லா வந்த பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, துணை முதல்வர் முகேஷ் அக்னிஹோத்ரியின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்குச் சென்று அவரைச் சந்தித்தார். இது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பாகப் பார்க்கப்படுகிறது. கடந்த மாதம் நடைபெற்ற துணை முதல்வரின் இல்லத் திருமண விழாவில் பங்கேற்க முடியாததால், நல்லெண்ண அடிப்படையில் மரியாதை நிமித்தமாகவே இந்தச் சந்திப்பு நிகழ்ந்ததாக பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஆளும் கட்சிக்குள் மோதல் போக்கு நிலவும் வேளையில், எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த துணை முதல்வரைச் சந்தித்திருப்பது அம்மாநில அரசியலில் பல்வேறு யூகங்களைக் கிளப்பியுள்ளது.

 

Advertisement

Related News