தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தேசிய தலைவர் பங்கேற்ற கூட்டத்தில் பாஜக பெண் எம்பிக்கு மீண்டும் அவமதிப்பு: மத்திய பிரதேசத்தில் பரபரப்பு

ஜபல்பூர்: பாஜக தேசிய தலைவர் பங்கேற்ற கூட்டத்தில், கட்சியின் ராஜ்யசபா பெண் எம்.பி ஒருவரே பாதுகாப்பு அதிகாரிகளால் அவமதிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டது அக்கட்சி வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, மாநில முதல்வர் மோகன் யாதவ் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்ற முக்கிய ஆலோசனை ககூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க வந்த எம்பி சுமித்ரா பால்மிக்கை, பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்படுகிறது. வாக்குவாதத்தின்போது, காவலர்கள் அவரைத் தள்ளிவிட்டதாகவும், இதனால் ஆத்திரமடைந்த பாஜக தொண்டர்கள் முழக்கங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. மூத்த தலைவர்கள் தலையிட்டு சமாதானம் செய்த பின்னரே, எம்பி கூட்டத்தில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டார்.

Advertisement

எப்போதும் எளிமையாக இருக்கும் சுமித்ரா, எந்தவித பாதுகாப்பு மற்றும் ஆரவாரம் இன்றி கூட்டத்திற்கு வந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. இதனால் மனமுடைந்த அவர், கூட்டத்தில் அதிருப்தியுடன் காணப்பட்டார். இதுபோன்ற அவமதிப்பை தனது கட்சியினரால் எம்பி சுமித்ரா பால்மிக் எதிர்கொண்டுள்ளார். கடந்த 2022 ஜூலையில், சாகர் சர்க்யூட் ஹவுஸில் அவருக்குத் தெரிவிக்காமல் அவரது உடைமைகள் அகற்றப்பட்டு சர்ச்சையை ஏற்படுத்தியது. அதேபோல், 2023 ஜூனில், உலக யோகா தின நிகழ்ச்சியில், அவருக்கான நாற்காலி மேடைக்குப் பின்னால் போடப்பட்டிருந்தது. அப்போதைய மாவட்ட ஆட்சியர் சவுரப் சுமன் தான் இந்த அவமதிப்பிற்கு காரணம் என்று அவர் வெளிப்படையாக குற்றம் சாட்டினார். இந்த சம்பவங்களைத் தொடர்ந்து, தற்போது மூன்றாவது முறையாக சுமித்ரா பால்மிக் அவமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Related News