தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

"எனக்கு வாக்களிக்கவிட்டாலும், பாஜக-வுக்கு வாக்களிக்க வேண்டாம்": தேனியில் நா.த.க. வேட்பாளருக்கு ஆதரவாக சீமான் பரப்புரை..!!

Advertisement

சென்னை: எனக்கு வாக்களிக்கவிட்டாலும், பாஜக-வுக்கு வாக்களிக்க வேண்டாம் என தேனியில் நா.த.க. வேட்பாளருக்கு ஆதரவாக சீமான் பரப்புரை நடத்தினார். மக்களவை தேர்தலுக்கு 2 வாரங்களே இருக்கும் நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில், விழுப்புரம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து அமைச்சர் பொன்முடி பானை சின்னத்தில் வாக்கு சேகரித்தார். அதிமுக 4 அணிகளாக பிரிந்து கிடக்கிறது என்று பேசிய பொன்முடி, ஒருவர் என்னென்னவோ செய்ய நினைத்ததாகவும், உச்சநீதிமன்றம் அவர் தலையில் கொட்டு வைத்ததாகவும் ஆளுநரை மறைமுகமாக சாடினார்.

நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியில், கன்னியாகுமரி தொகுதி பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் பிரச்சாரத்தை தொடங்கினார். பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தாக்கி பேசினார். ஒற்றை விரலால் ஓங்கி அடிப்போம் என்று பழனிசாமி கூறுவது மீதமுள்ள 4 விரல்களை காணவில்லை என்பதாகவே கருதப்படும் என்றார். தேனி அல்லி நகரம் தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், கச்சதீவுகளை மீட்போம் என்று கூறுபவர்களை நம்பக்கூடாது என்றார்.

தனக்கு வாக்களிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை, பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டார். தருமபுரி தொகுதி பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி, கிராமம் கிராமமாக சென்று வாக்கு சேகரித்தார். பாமக நிறுவனர் ராமதாஸ் போராட்டத்தால் தான் இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டதாக கூறிய சவுமியா, தருமபுரியை முன்னேற்றுவது மட்டுமே தனது குறிக்கோள் என்று பிரச்சாரம் செய்தார்.

விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன், விருதுநகர் நகராட்சி பூங்காவில் நடைப்பயிற்சி செல்வோரிடம் வாக்கு சேகரித்தார். பின்னர் கல்லூரி சாலையில் தூய்மை பணியாளர்களிடம் ஓட்டு கேட்ட அவர், தேநீர் கடையில் தேநீர் அருந்தினார். பிரச்சாரத்தின் போது பலரும் விஜய பிரபாகரனுடன் செல்பி எடுத்துக்கொண்டனர்.

Advertisement