தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

புதுச்சேரி அரசுக்கு எதிராக பாஜ எம்எல்ஏக்கள் போர்க்கொடி: அமைச்சர் பதவி கேட்டு அடம்

புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ், பாஜ கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்நிலையில் பாஜ வேட்பாளராக களம் இறங்கிய உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்திடம் தோல்வி அடைந்தார். இது என்ஆர் காங்கிரஸ், பாஜ நிர்வாகிகள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் பாஜ எம்எல்ஏக்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார், வெங்கடேசன், அசோக்பாபு, பாஜ ஆதரவு எம்எல்ஏக்கள் சிவசங்கர், அங்காளன் உள்ளிட்டோர் காலாப்பட்டு அருகே தனியார் ஓட்டலில் நேற்று ரகசியமாக கூடி ஆலோசனை நடத்தினர்.
Advertisement

ஆலோசனைக்கு பிறகு பாஜ மாநில தலைவர் செல்வகணபதிக்கு அழைப்பு விடுத்து ஓட்டலுக்கு வரவழைத்த எம்எல்ஏக்கள், தேர்தல் முடிவால் கட்சியின் இமேஜ் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளது. கட்சியில் உள்ள மற்ற எம்எல்ஏக்களுக்கும் சுழற்சி முறையில் அமைச்சர் பதவி வழங்க வேண்டும், அதுமட்டுமின்றி பாஜவை ஆதரிக்கும் சுயேட்சை எம்எல்ஏக்களுக்கு வாரிய தலைவர் பதவி வழங்க வேண்டுமென வலியுறுத்தியதாக தெரிகிறது.

இதை வருகிற சட்டசபை கூட்டத் தொடருக்கு முன்பாகவே செய்ய மறுத்தால் அரசுக்கு எதிராக சபையில் கடுமையாக குரல் எழுப்புவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். பாஜ எம்எல்ஏக்களின் திடீர் போர்க்கொடி குறித்து டெல்லி சென்று தேசிய தலைமையிடம் தெரிவிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் என்ஆர் காங்கிரஸ் தரப்பு கலக்கத்தில் உள்ளது.

ஏற்கனவே புதுச்சேரியில் என்ஆர் காங்கிரசை சேர்ந்த சந்திர பிரியங்கா பதவி நீக்கத்துக்குபின் அமைச்சராக பதவியேற்ற திருமுருகனுக்கு இதுவரை இலாகா ஒதுக்கப்படாமல் இருப்பது, நாடாளுமன்ற தேர்தலில் நமச்சிவாயம் தோல்வியை சந்தித்தது, அமைச்சரின் மகளுக்கு சொந்தமான இடத்தில் 6 டன் சந்தனகட்டை பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் உள்ளிட்டவை முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அரசுக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் பாஜ எம்எல்ஏக்கள் தனி குழுவாக ஆலோசித்து அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருப்பது புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Advertisement

Related News