தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ரூ.1.40 கோடி கடனை ஏமாற்ற தற்கொலை நாடகம்; 10 நாட்களாக ஆற்றில் தேடப்பட்ட பாஜக பிரமுகர் மகன் கைது: மகாராஷ்டிராவில் சினிமா பாணியில் சிக்கினார்

போபால்: ஒன்றரை கோடி ரூபாய் கடனுக்காக தற்கொலை செய்துகொண்டதாக நாடகமாடிய பாஜக பிரமுகரின் மகன் மகாராஷ்டிராவில் உயிருடன் பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் ராஜ்கர் மாவட்டத்தை சேர்ந்த பாஜக பிரமுகர் மகேஷ் சோனியின் மகன் விஷால் சோனி. கடந்த 5ம் தேதி இவருக்கு சொந்தமான கார் ஒன்று காளிசிந்து ஆற்றில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்டது. அதில் விஷால் இல்லாததால், அவர் ஆற்றில் மூழ்கி இறந்திருக்கலாம் என கருதி காவல்துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் அடங்கிய மூன்று தனிக்குழுக்கள் கடந்த 10 நாட்களாக ஆற்றில் சுமார் 20 கிலோமீட்டர் தூரத்திற்கு தீவிரமாக தேடி வந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது.

Advertisement

இந்நிலையில், விஷாலின் செல்போன் அழைப்பு விவரங்களை ஆய்வு செய்தபோது அவர் மகாராஷ்டிராவில் உயிருடன் பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, மகாராஷ்டிரா காவல்துறையின் உதவியுடன் சாம்பாஜி நகர் மாவட்டத்தில் வைத்து விஷாலை அதிரடியாக கைது செய்தனர். விசாரணையில், தனக்கு சொந்தமான வாகனங்கள் மூலம் ஏற்பட்ட ரூ.1.40 கோடி கடனை திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றுவதற்காக, இறப்புச் சான்றிதழ் பெற்றால் வங்கிக் கடன் தள்ளுபடியாகும் என்று நம்பி தற்கொலை நாடகமாடியதை அவர் ஒப்புக்கொண்டார்.

கார் ஆற்றில் தள்ளிவிட்டு, ஓட்டுநரின் இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றதும், காவல்துறையினர் தன்னை நெருங்குவதை அறிந்ததும், தன்னை யாரோ கடத்திவிட்டதாக நாடகமாட முயன்றதும் அம்பலமானது. ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாக நாடகமாடுவதை தண்டிப்பதற்கு நேரடியான சட்டப்பிரிவுகள் இல்லாததால், போலீசார் அவரைக் கண்டித்து குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.

Advertisement

Related News