தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நடுரோட்டில் ஓட ஓட விரட்டி பாஜ பிரமுகரின் கணவரை வெட்டிய 6 பேர் சரண்

வளசரவாக்கம்: சென்னை திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் நதியா. பாஜ மகளிர் அணி மாநில பொது செயலாளராக உள்ளார். இவரது கணவர் சீனிவாசன், நேற்று முன்தினம் பைக்கில் திருமங்கலம் கார்டன் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது, மின்னல் வேகத்தில் வந்து நின்ற ஆட்டோவில் இருந்து இறங்கிய 6 பேர், சீனிவாசனை வழிமறித்து பட்டா கத்தியால் வெட்ட முயன்றனர். சுதாரித்துக்கொண்ட சீனிவாசன் அங்கிருந்து தப்பி ஓடினார். ஆனால், அவரை ஓட ஓட விரட்டி சென்று, சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். சீனிவாசன் பலத்த வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் மயங்கினார். தகவலறிந்து வந்த திருமங்கலம் போலீசார், சீனிவாசனை மீட்டு அண்ணாநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Advertisement

இதுகுறித்து திருமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து தப்பி ஓடிய 6 பேரை தேடி வந்தனர். இதனிடையே, நேற்று அதிகாலை 3.30 மணியளவில் திருமங்கலம் காவல் நிலையத்திற்கு வந்த 6 பேர், பாஜ பிரமுகரின் கணவரை கொல்ல முயன்றதாக கூறி சரணடைந்தனர். விசாரணையில், அவர்களது பெயர் பிரசாந்த், பிரகாஷ், சீனிவாசன், சரவணன், ராகேஷ், கணேசன் என்பது தெரிந்தது. அவர்களை கைது செய்து, கடந்த 2005ம் ஆண்டு சென்னை யானைகவுனியில் நெடுஞ்செழியன் எ ன்பவரை கொலை செய்தது தொடர்பாக பழிவாங்க கொலை முயற்சி நடந்ததா அல்லது முன்விரோதம் காரணமாக நடந்ததா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சீனிவாசனுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement