நடுரோட்டில் ஓட ஓட விரட்டி பாஜ பிரமுகரின் கணவரை வெட்டிய 6 பேர் சரண்
Advertisement
இதுகுறித்து திருமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து தப்பி ஓடிய 6 பேரை தேடி வந்தனர். இதனிடையே, நேற்று அதிகாலை 3.30 மணியளவில் திருமங்கலம் காவல் நிலையத்திற்கு வந்த 6 பேர், பாஜ பிரமுகரின் கணவரை கொல்ல முயன்றதாக கூறி சரணடைந்தனர். விசாரணையில், அவர்களது பெயர் பிரசாந்த், பிரகாஷ், சீனிவாசன், சரவணன், ராகேஷ், கணேசன் என்பது தெரிந்தது. அவர்களை கைது செய்து, கடந்த 2005ம் ஆண்டு சென்னை யானைகவுனியில் நெடுஞ்செழியன் எ ன்பவரை கொலை செய்தது தொடர்பாக பழிவாங்க கொலை முயற்சி நடந்ததா அல்லது முன்விரோதம் காரணமாக நடந்ததா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சீனிவாசனுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Advertisement