தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாஜக நிர்வாகி: பழங்குடியின அமைப்பு போராட்டம்

போபால்: மத்தியப் பிரதேசத்தில் பெண் காவலருக்கு பாஜக பிரமுகர் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் சம்பவத்தில், அவரைக் கைது செய்யக் கோரி பழங்குடியின அமைப்பு போராட்டத்தில் இறங்கியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் பர்வானி மாவட்டத்தில் கடந்த 2021ம் ஆண்டு, பாஜக எம்பி ஒருவரை அவதூறாகப் பேசியதாகக் கூறி, பழங்குடியினரின் ‘ஜெய் ஆதிவாசி யுவ சக்தி’ (ஜெய்ஸ்) அமைப்பைச் சேர்ந்த தொண்டர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அன்று முதல் இரு தரப்புக்கும் இடையே புகைச்சல் நீடித்து வருகிறது. இதனிடையே, மத்தியப் பிரதேசத்தில் ஆளும் பாஜக கட்சியைச் சேர்ந்த பிரமுகர்கள் அரசு அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்து வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

Advertisement

கடந்த ஏப்ரல் மாதம் சித்தி மாவட்டத்தில் பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கிய பாஜக நிர்வாகி ஒருவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், பர்வானி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் தலைமைக் காவலர் ஒருவர், பாஜகவின் சிலாவாத் மண்டல் தலைவர் அஜய் யாதவ் மீது பாலியல் சீண்டல் மற்றும் கொலை மிரட்டல் புகார் அளித்துள்ளார். தன்னை அஜய் யாதவ் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகவும், அதைத் தடுத்தபோது கொலை செய்துவிடுவதாக மிரட்டியதாகவும் அந்தப் பெண் காவலர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். இந்தப் புகாரைத் தொடர்ந்து, ‘ஜெய்ஸ்’ அமைப்பு போராட்டத்தில் இறங்கியுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட அஜய் யாதவை உடனடியாகக் கைது செய்து, அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த அமைப்பு வலியுறுத்தி வருகிறது.

ஆளுங்கட்சி பிரமுகர் சம்பந்தப்பட்ட இந்த விவகாரம், மாநிலத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், போலீசார் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. குற்றம்சாட்டப்பட்ட அஜய் யாதவ் மீதான புகார் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Advertisement