தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாஜ விழுங்க நான் புழு கிடையாது: எடப்பாடி பழனிசாமி ஆவேச பேச்சு

கும்பகோணம்: அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். நேற்று மாலை தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் அவர் பேசியது: வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி 210 இடங்களில் வெற்றி பெறும். அதிமுக தனித்து ஆட்சி அமைக்கும். அதிமுக ஆட்சியில் விலைவாசி உயரவில்லை. கொரோனா காலத்தில் உயரதிகாரிகளுடன் பேசி ஆல் பாஸ் என அனைத்து மாணவ, மாணவிகளையும் தேர்ச்சி பெற செய்தது அதிமுக அரசுதான்.
Advertisement

இதை மாணவர்கள் எண்ணி பார்க்க வேண்டும். ஒரே ஆண்டில் 11 மருத்துவ கல்லூரி மருத்துவமனை கொண்டு வந்தோம். அதிமுக ஆட்சியில் தான் கல்விக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது. இப்போது ஆசிரியர்கள், விவசாயிகள், அரசு ஊழியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எடப்பாடி பழனிசாமி, பாஜவுடன் கூட்டணி வைத்து விட்டார். பாஜ விழுங்கி விடும் என்கின்றனர். எடப்பாடி பழனிசாமி என்ன புழுவா? மீன் தின்பதற்கு. இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சி முடிந்த பின்னர் இரவு கும்பகோணத்தில் உள்ள ஓட்டலில் தங்கினார். அந்த ஓட்டலில் இன்று அவர் தொழிலதிபர்கள், விவசாயிகள், வணிகர்களை சந்தித்து பேசுகிறார். மாலை 5 மணிக்கு தஞ்சை செல்லும் எடப்பாடி ஆத்துபாலத்திலிருந்து ரயிலடி வரை ரோடு ஷோ நடத்துகிறார். பின்னர் திருவையாறு செல்லும் அவர் இரவு தஞ்சை வந்து தங்குகிறார். நாளை பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு பகுதிகளில் பிரசாரம் செய்கிறார்.

எடப்பாடி உளறல்;

எடப்பாடி மேலும் பேசுகையில், நாடாளுமன்றத்தில் 39 எம்எல்ஏ இருக்கிறார்கள் என்று வாய் தவறி கூறினார். பின்னர் சுதாரித்து கொண்டு 39 எம்.பிக்கள் உள்ளனர். ஏன் ஒன்றிய அரசை கேள்வி கேட்கவில்லை என்றார்.

Advertisement

Related News