தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாஜவை கழற்றிவிட எடப்பாடி திட்டமா?: நயினார் பதில்

வில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில், தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவரிடம் செய்தியாளர்கள், ‘‘தவெகவுடன் அதிமுக கூட்டணி இணைந்த பின்னர் பாஜவை அதிமுக கழற்ற விட்டு விடுவார்கள் என டிடிவி.தினகரன் கூறியிருக்கிறாரே’’ என்றனர். அதற்கு நயினார் நாகேந்திரன் பதிலளிக்கையில், ‘‘ஒவ்வொருவரின் சொந்த கருத்திற்கு பதில் சொல்ல முடியாது. அவர் மீது என்ன வெறுப்பு என எனக்கு தெரியாது. என் மீதும் சில வெறுப்புகளை தெரிவித்தார். தற்போது அது இல்லை.

Advertisement

தனது சொந்த பிரச்னைகளுக்காக கட்சிகளைப் பற்றி பேசுவது சரியாக இருக்காது. கரூர் சம்பவத்தை பொறுத்தவரை, அஸ்ரா கார்க் தற்போதுதான் பொறுப்பெடுத்துள்ளார். அவரது விசாரணைக்கு பின்பே கருத்து கூற முடியும். ஒரு நபர் கமிஷன் மீது குறை சொல்லக்கூடாது. தூத்துக்குடி விவகாரம் குறித்து கமிஷன் அமைத்தார்கள். அதில் என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என யாருக்கும் தெரியாது.

வழக்கறிஞரை திருமாவளவன் ஆட்கள்தான் அடித்துள்ளனர். இதற்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை. ஆர்எஸ்எஸ் - பாஜதான் காரணம் என்னும் சொல்லும் திருமாவளவன் எங்கள் கூட்டணிக்கு வந்து விடலாம். பாஜ கூட்டணியில் தவெக வருகிறதா என்கிறீர்கள். பாஜ கூட்டணியில் யார் வேண்டுமானாலும் வரலாம். ஜனவரி மாதத்திற்கு பின்னரே கூட்டணி முடிவுக்கு வரும். இவ்வாறு கூறினார்.

Advertisement