தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாஜவை நாட்டை விட்டு வெளியேற்றுவோம்: ஹேமந்த் சோரன் சூளுரை

சாகிப்கஞ்ச்: ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனை நில மோசடியுடன் தொடர்புடைய பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்தது.5 மாதங்கள் சிறையில் இருந்த ஹேமந்த் சோரனை கடந்த 28ம் தேதி ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் ஜாமீனில் விடுதலை செய்தது. இந்நிலையில், பிரிட்டிஷ் ஆட்சியில் நடந்த அட்டூழியங்களுக்கு எதிராக போராடிய பழங்குடியின வீரர்களின் நினைவு தினம் சாகிப்கஞ்ச் மாவட்டம்,போக்னாதிஹ் என்ற இடத்தில் நேற்று நடந்தது.
Advertisement

இதையொட்டி நடந்த பேரணியில் பங்கேற்ற ஹேமந்த் சோரன் பேசுகையில்,‘‘ பிரிட்டிஷாருக்கு எதிராக நடந்த சந்தால் புரட்சியை போல,ஜார்க்கண்ட் மட்டுமில்லாமல் நாடு முழுவதும் உள்ள நில பிரபுத்துவ சக்திகளை விரட்டியடிப்போம் என உறுதி கூறுகிறேன். இந்தியா கூட்டணி கட்சிகள் பாஜவை நாட்டை விட்டு வெளியேற்றும். நான் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளதால் பாஜ தலைவர்கள் என்னை பார்த்து கலக்கமடைந்துள்ளனர். என் மீது பொய்யான வழக்கை போட்டுள்ளனர். புரட்சியாளர்களுக்கு பெயர் போன மாநிலம் ஜார்க்கண்ட். சிறை, லத்தி மற்றும் மரண தண்டனை என எதற்கும் அஞ்ச மாட்டோம்’’ என்றார்.

Advertisement

Related News