தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஸ்திரமற்ற நிலையில் இருக்கும் பாஜக கூட்டணி அரசு நீண்ட காலம் நீடிக்காது: மம்தா பானர்ஜி கணிப்பு

Advertisement

மும்பை: ‘ஒன்றியத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஸ்திரமற்ற நிலையில் உள்ளது; அந்த அரசு நீண்ட காலம் நிலைக்காது’ என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார். மகாராஷ்டிரா மாநிலம் மும்பை பாந்த்ரா பகுதியில் வசிக்கும் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவை மேற்குவங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா சந்தித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘ஒன்றியத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஸ்திரமற்ற நிலையில் உள்ளது. இந்த அரசு நீண்ட காலம் நிலைக்காது.

நாட்டில் அவசரநிலை அறிவிக்கப்பட்ட ஜூன் 25ம் தேதி அரசமைப்பு படுகொலை தினமாக அனுசரிக்கப்படும் என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. நாங்கள் அவசரநிலை பிரகடனத்தை ஆதரிக்கவில்லை. அதேநேரம், பிரதமர் மோடியின் ஆட்சிக் காலத்தில் அவசரநிலையுடன் தொடர்புடைய தருணங்களே பெரும்பாலும் எதிரொலித்தன. மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து யாருடனும் ஆலோசிக்கப்படவில்லை. ஏராளமான எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த நேரத்தில், அந்த சட்டங்கள் அவை யில் நிறைவேற்றப்பட்டன’ என்றார்.

தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ் நிறுவனர் சரத் பவாரை தெற்கு மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் மம்தா சந்தித்துப் பேசினார்.அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், மகராஷ்டிராவில் மொத்தமுள்ள 48 தொகுதிகளில் எதிர்க்கட்சிகளின் மகா விகாஸ் அகாடி கூட்டணி 30 தொகுதிகளைக் கைப்பற்றியது. மகாராஷ்டிரா சட்டப் பேரவைக்கு அடுத்த சில மாதங்களில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நாட்டில் தற்போது நிலவும் அரசியல் சூழல் குறித்து தலைவர்கள் ஆலோசித்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement

Related News