தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாஜவுடன் கூட்டணி தவறில்லை: எடப்பாடி பழனிசாமி பிரசாரம்

Advertisement

தஞ்சை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ‘’மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’’ என்ற பிரசார பயணத்தை மேற்கொண்டு வருகிறார். இந்த பயணத்தின்போது தஞ்சையில் நேற்றிரவு அவர் பேசியதாவது: டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு அதிக திட்டங்களை கொண்டு வந்தது அதிமுகதான். மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்கள் வரவிடாமல் தடுத்து ஒன்றிய அரசுடன் பேசி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை கொண்டு வந்தோம்.

வடசேரி பகுதியில் நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கான முயற்சியையும் அதிமுக அரசு தடுத்தது. அதிமுகவை உடைப்பதற்கு, பிளக்க எத்தனையோ அவதாரம் எடுத்தார்கள். அது மக்கள், கட்சி நிர்வாகிகளுடன் தூள் தூளாக்கப்பட்டது. நானும் ஒரு விவசாயி தான். விவசாயி நாட்டை ஆளக்கூடாதா? அதிமுகவில் உழைப்பவர்களுக்கு பதவி கிடைக்கும். பாஜகவுடன் நாங்கள் கூட்டணி வைத்தால் என்ன தவறு? மக்களை மீட்போம் தமிழகத்தை காப்போம்.இவ்வாறு பேசினார்.

தஞ்சை மாவட்டம் மணக்கரம்பை ஊராட்சி பள்ளி அக்ரகாரம் ரவுண்டானா பகுதி ஊராட்சி நிர்வாகம் மற்றும் தனியார் ஹோட்டல் சார்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது. எடப்பாடி வருகையால் அதிமுக சார்பில் பள்ளி அக்ரஹாரம் ரவுண்டானாவில் புல்தரை மற்றும் கம்பிகளை சேதப்படுத்தி விளம்பர பலகைகள் மற்றும் கொடிகள் வைக்கப்பட்டுள்ளது. இதனால் ரவுண்டானா முழுவதும் சேதம் அடைந்தது.

நேற்றிரவு தஞ்சை ஓட்டலில் தங்கிய எடப்பாடி பழனிசாமி இன்று அந்த ஓட்டலில் விவசாயிகளை சந்தித்து கலந்துரையாடுகிறார். இதையடுத்து மாற்று கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். மாலை பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு பகுதிகளில் மக்களை சந்திக்க உள்ளார்.

மூதாட்டி மயக்கம்;

தஞ்சையில் எடப்பாடி பழனிசாமி பேசிக்கொண்டிருந்தபோது கூடலூரை சேர்ந்த லெட்சுமி(60) என்பவர் மயங்கி விழுந்தார். உடனடியாக அவருக்கு போலீசார் முதலுதவி செய்து தண்ணீர், பிஸ்கட் வாங்கி கொடுத்தனர். விசிறி விட்டு அவரை அவரது உறவினர்களுடன் அனுப்பி வைத்தனர்.

Advertisement

Related News