தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாஜ, அதிமுக தோல்வி நிர்வாகிகள் ‘மொட்டை’

Advertisement

சென்னை: மக்களவை தேர்தலில் பாஜ, அதிமுக தோல்வியால் கட்சி நிர்வாகிகள் மொட்டை போட்டு கொண்டனர். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட உடன்குடி ஒன்றிய பாஜ சார்பில் ஒன்றிய அரசின் நலத்திட்ட பிரிவு செயலாளராக இருந்தவர் ஜெய்சங்கர். மக்களவை தேர்தலில் கோவை தொகுதியில் பாஜ சார்பில் போட்டியிட்ட மாநில தலைவர் அண்ணாமலை நிச்சயம் வெற்றி பெறுவார், அவர் தோற்றால் மொட்டை அடித்துக் கொண்டு பரமன்குறிச்சி பஜாரில் வலம் வருவேன் என விடுதலை சிறுத்தைகள் மற்றும் அதிமுகவை சேர்ந்த நண்பர்களிடம் சவால் விடுத்துள்ளார்.

தேர்தல் முடிவில் 40 இடங்களிலும் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. கோவையில் பாஜ மாநில தலைவர் அண்ணாமலையும் தோல்வியை தழுவினார். இதையடுத்து பாஜ நிர்வாகி ஜெய்சங்கர், நேற்று முன்தினம் பரமன்குறிச்சி பஜாரில் மொட்டையடித்துக் கொண்டு, பஜார் பகுதியை வலம் வந்தார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. இதேபோல நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை ஒன்றியம் ஆலத்தூர் நாடு முன்னாள் ஊராட்சி மன்ற துணைத்தலைவரான அதிமுக நிர்வாகி வரதராசு, மொட்டை அடித்துக் கொண்டு விரக்தியில் வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அதில், ‘தமிழ்நாட்டில், அதிமுக படுதோல்வி அடைந்ததால், விரக்தியில் மொட்டை அடிக்கிறேன். இனியாவது அதிமுகவில் பிரிந்துள்ள அணிகள் ஒன்று சேர வேண்டும்’ என கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement

Related News