5 கட்ட தேர்தலுக்கு பின் பாஜவுக்கு 310 தொகுதிகள் : அமித் ஷா நம்பிக்கை
5கட்ட தேர்தல் முடிந்துள்ள நிலையில் பாஜ 310 தொகுதிகளை கைப்பற்றும் நிலையில் உள்ளது. 6 மற்றும் 7 கட்ட தேர்தல் முடிந்த பின் 400க்கும் மேற்பட்ட தொகுதிகளை பாஜ கைப்பற்றும். ஒடிசாவின் பெருமை, மொழி, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பிஜூ ஜனதா தளம் அரசு அவமதிக்கிறது. கனிம வளங்கள் இருந்தாலும் மாநிலத்தின் வளங்களை பாதுகாக்கும் முதல்வர் இல்லை. மாநிலத்தின் அனைத்து பகுதிகளின் சமமான வளர்ச்சிக்கு பாஜ உறுதி பூண்டுள்ளது என்றார்.
* ஒரு தமிழர் ஒடிசாவை ஆள நினைப்பதா?
ஒடிசாவில் பிரசாரம் ெசய்த ஒன்றிய அமைச்சர் அமித்ஷா கூறுகையில்,’பாஜவுக்கு வாக்களித்தால் ஆற்றல் மிக்க ஒடிசாவை மண்ணின் மகன் ஆட்சி செய்வார். ஆனால் முதல்வர் நவீன் ஒடிசாவில் அதிகாரிகள் ஆட்சி அமைக்க கட்டாயப்படுத்துகிறார். ஒடியா மக்களின் பெருமை மற்றும் கண்ணியத்தைத் தாக்குகிறார். அவர் மாநிலத்தின் கலாச்சாரம் மற்றும் பெருமையை நசுக்குகிறார். மக்கள் பாஜவுக்கு வாக்களித்தால் மண்ணின் மைந்தன் ஆட்சி நடத்துவார். தமிழ்நாட்டின் அதிகாரி அல்ல’ என்றார்.