பாஜக, ஆர்.எஸ்.எஸ். ஆகியன அரசமைப்பை அழித்து வருகின்றன: ஹரியானா பரப்புரையில் ராகுல் காந்தி பேச்சு
Advertisement
பாஜக, ஆர்.எஸ்.எஸ். ஆகியன அரசமைப்பை அழித்து வருகின்றன. அரசமைப்பை பாதுகாக்க நினைப்போர் ஒருபுறம்; அழிக்க நினைப்போர் மறுபுறம் உள்ளனர். இந்த மாநிலத்தை பா.ஜ.க அரசு சீரழித்துவிட்டது. வேலைவாய்ப்பின்மை பட்டியலில் எப்படி ஹரியானாவை முதன்மை இடத்திற்கு கொண்டு வந்தோம் என்பதை பற்றி பிரதமர் மோடி விளக்கவில்லை. கோடீஸ்வரர்களுக்கான அரசை பிரதமர் மோடி நடத்துகிறார். 20 -25 பேரின் ரூ.16 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்துள்ளார். ஹரியானாவை சேர்ந்த விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் கடன் எவ்வளவு தள்ளுபடி செய்யப்பட்டது என்பது குறித்து பிரதமர் மோடி கூற வேண்டும்.
Advertisement