தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாஜக, ஆர்.எஸ்.எஸ். ஆகியன அரசமைப்பை அழித்து வருகின்றன: ஹரியானா பரப்புரையில் ராகுல் காந்தி பேச்சு

ஹரியானா: பாஜக, ஆர்.எஸ்.எஸ். ஆகியன அரசமைப்பை அழித்து வருகின்றன என ஹரியானா பரப்புரையில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு நுஹ் மற்றும் மகேந்திரகர் நகரங்களில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டங்களில் காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது அவர் பேசியது: காங்கிரஸ் கட்சியினரின் இதயங்களில் அன்பும் சகோதரத்துவமும் உள்ளது. நாம் அன்பு மற்றும் ஒற்றுமையை விதைக்கிறோம்; பாஜக வெறுப்பை விதைக்கிறது. எங்கு வெறுப்பை பாஜக விதைத்ததோ அங்கெல்லாம் நடை பயணத்தின்போது அன்பை விதைத்தேன்.
Advertisement

பாஜக, ஆர்.எஸ்.எஸ். ஆகியன அரசமைப்பை அழித்து வருகின்றன. அரசமைப்பை பாதுகாக்க நினைப்போர் ஒருபுறம்; அழிக்க நினைப்போர் மறுபுறம் உள்ளனர். இந்த மாநிலத்தை பா.ஜ.க அரசு சீரழித்துவிட்டது. வேலைவாய்ப்பின்மை பட்டியலில் எப்படி ஹரியானாவை முதன்மை இடத்திற்கு கொண்டு வந்தோம் என்பதை பற்றி பிரதமர் மோடி விளக்கவில்லை. கோடீஸ்வரர்களுக்கான அரசை பிரதமர் மோடி நடத்துகிறார். 20 -25 பேரின் ரூ.16 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்துள்ளார். ஹரியானாவை சேர்ந்த விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் கடன் எவ்வளவு தள்ளுபடி செய்யப்பட்டது என்பது குறித்து பிரதமர் மோடி கூற வேண்டும்.

Advertisement

Related News