தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பட்டியலின வாலிபரை சரமாரியாக தாக்கிய பாஜ நிர்வாகி வன்கொடுமை வழக்கில் கைது

Advertisement

காங்கயம்: திருப்பூர் மாவட்டம் காங்கயம் ஒன்றிய பாஜ பொதுச்செயலாளர் இன்று வன்கொடுமை உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டார். திருப்பூர் மாவட்டம், காங்கயம் அடுத்துள்ள வீரணம்பாளையத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் (40). காங்கயம் தெற்கு ஒன்றிய பாஜ பொதுச்செயலாளர். இவர், ஆட்டோ பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது பைனான்சில் இதே பகுதியில் உள்ள சகாயபுரத்தை சேர்ந்த பட்டியலின வாலிபர் சங்கர் (20) தனது டூவீலர் ஆர்.சி.புத்தகத்தை அடமானம் வைத்து கடன் பெற்றார்.

கடந்த 4 மாதம் தவணை செலுத்தவில்லை என்று தெரிகிறது. இதனையடுத்து சங்கரை நேற்று தனது அலுவலகத்திற்கு வருமாறு சதீஷ்குமார் அழைத்தார். அதன்பேரில் அலுவலகம் வந்தார். அப்போது தவணை செலுத்தாதது குறித்து வாக்குவாதம் ஏற்பட்டது.இதில் ஆத்திரமடைந்த சதீஷ்குமார், அலுவலகத்தின் ஷட்டரை மூடி சாதி பெயரை கூறி சங்கரை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் அவர் படுகாயம் அடைந்த சங்கர், காங்கயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவர் கொடுத்த புகாரின்பேரில் காங்கயம் போலீசார் விசாரணை நடத்தி வன்கொடுமை, கொலை மிரட்டல், சாதி பெயரை கூறி திட்டுதல் மற்றும் தாக்குதல் என 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து சதீஷ்குமாரை கைது செய்தனர்.

 

Advertisement