தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாஜவில் யாருக்கு செல்வாக்கு என்பதில் நயினார், அண்ணாமலை, தமிழிசை இடையே கடும் போட்டி நிலவுகிறது: அமைச்சர் சேகர்பாபு பேட்டி

Advertisement

சென்னை: சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில், திருமங்கலம் நேருநகர், கொளத்தூர் தொகுதியில் உள்ள 64, 64அ மற்றும் 69வது வட்டத்தில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று வீடுவீடாக சென்று பரப்புரை மேற்கொண்டார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழிசை சவுந்தரராஜன் கவிதையில் மக்கள் ஏமாறாமல் உள்ளனர். அதனால்தான் அவர் நின்ற தேர்தலில் மக்கள் அவருக்கு தோல்வியை பரிசாக அளித்துள்ளனர். நான் தமிழிசைக்கு புதிய கவிதையை உரிதாக்கினேன். தோல்வியின் முகமே தமிழிசையே எங்கள் அக்காவே.. வருக என கூறினேன். அவரை பார்த்தால் பரிதாபமாக உள்ளது.

ஏதாவது தக்க வைப்பதற்காக அவர் அப்படி பேசி வருகிறார். ஏற்கனவே நாற்காலி போட்டி கடுமையாக உள்ளது. பாஜவில் யாருக்கு செல்வாக்கு என்பதை காட்டுவதற்காகதான் தமிழிசை, அண்ணாமலை, நயினார் இடையே கடும் போட்டி நடைபெற்று வருகிறது. இதனால்தான் செல்வாக்கு பெற்ற தலைவர் என காட்டிக்கொள்வதற்காக தமிழிசை பேசி வருகிறார். அதனை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.சட்டம்-ஒழுங்கு சரியாக இருப்பதால் தான் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். வாயில் வருவதை எல்லாம் பேசிகொண்டும் உளறிக் கொண்டிருக்கிறார்.

இவ்வாறு கூறினார்.

Advertisement

Related News