தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாஜக நிர்வாகி கேசவ விநாயகத்துக்கு நோட்டீஸ்; ரூ.4 கோடி வழக்கில் ‘ஹார்ட் டிஸ்க்’ மாயம்: சுப்ரீம் கோர்ட்டில் சிபிசிஐடி வாதம்

புதுடெல்லி: பாஜக நிர்வாகி கேசவ விநாயகம் தொடர்பான ₹4 கோடி சிக்கிய வழக்கில் ‘ஹார்ட் டிஸ்க்’ மாயமாகி உள்ளதாக சுப்ரீம் கோர்ட்டில் சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் போது நெல்லையில் பாஜக சார்பில் போட்டியிட்ட நயினார் நாகேந்திரனின் ஓட்டல் ஊழியர் சதீஷ் என்பவரிடம் இருந்து தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடியை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய மாநில பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம், கடந்த சில வாரங்களுக்கு முன் சென்னை எழும்பூர் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
Advertisement

இதற்கிடையே கேசவ விநாயகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், நீதிமன்றத்தின் அனுமதியின்றி கேசவ விநாயகத்தை விசாரணைக்கு அழைக்க கூடாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த மாதம் பிறப்பித்த இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் சிபிசிஐடி மேல்முறையீடு செய்தது. இவ்வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது சிபிசிஐடி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபில், ‘சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவால், கேசவ விநாயகத்தை விசாரணைக்கு அழைக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தில் முறையிட்டு அனுமதி பெற்று தான் சம்மன் அனுப்ப முடியுமா?. 4 கோடி ரூபாய் வழக்கில் சம்பந்தப்பட்ட ‘ஹார்ட் டிஸ்க்’ காணாமல் போய் உள்ளது. அதுகுறித்து விசாரிக்க வேண்டி உள்ளது. எனவே சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’ என்று வாதிட்டார். இதனைத் தொடர்ந்து கேசவ விநாயகம் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement