தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பிட்ஸ்

 

Advertisement

பகுமானமாய் பவுமா 148 ஆண்டு சாதனை

கொல்கத்தா: இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி, 30 ரன் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பதிவு செய்தது. இது, கேப்டனாக டெம்பா பவுமா, தொடர்ச்சியாக பெறும் 10வது வெற்றியாகும். அவரது தலைமையில் தென் ஆப்ரிக்கா அணி 11 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 10ல் வெற்றி, ஒன்றில் டிரா செய்துள்ளது. இதன் மூலம் 148 ஆண்டு கால கிரிக்கெட் வரலாற்றில் தோல்வி அடையாமல் 10 வெற்றிகளை பெற்ற முதல் கேப்டன் என்ற சாதனையை டெம்பா பவுமா அரங்கேற்றி உள்ளார்.

ஆர்ஆர் தலைமை கோச்சாக சங்கக்கரா நியமனம்

ஜெய்ப்பூர்: ஐபிஎல் இடம்பெற்றுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இலங்கை முன்னாள் ஜாம்பவான் குமார் சங்கக்கரா மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே, கடந்த 2021-2024 ஆண்டுகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக சங்கக்கரா பதவி வகித்தார். அதன் பின் அவர் கிரிக்கெட் இயக்குநராக பதவி உயர்வு அளிக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது மீண்டும் அந்த அணியின் தலைமை பயிற்சியாளராக சங்கக்கரா நியமிக்கப்பட்டுள்ளார். அந்த அணியில் வேகப்பந்து பயிற்சியாளராக கடந்த 2024ல் சேர்ந்த ஷேன் பாண்ட், அந்த பணியில் தொடர்வார் என்றும் ஆர்ஆர் அணி நிர்வாகம் நேற்று அறிவித்துள்ளது.

சுப்மன் கில்லுக்கு பதில் நிதிஷ் குமார் ரெட்டி?

கொல்கத்தா: தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆடிய இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் 3 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டார். அவர் ஆடிய கடைசி பந்தை பவுண்டரி அடித்தபோது, கழுத்தில் கடுமையான சுளுக்கு ஏற்பட்டு வலியால் துடித்தார். அதன் பின், அன்றைய போட்டி முழுவதும் ஆடவில்லை. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவர் அடுத்த போட்டியில் ஆடுவாரா என்பது உறுதியாக தெரியவில்லை. இந்நிலையில் சுப்மன் கில், 2வது டெஸ்ட் போட்டியில் ஆட முடியாமல் போனால், அவருக்கு பதில் நிதிஷ் குமார் ரெட்டி களமிறங்குவார் என தகவல்கள் கூறுகின்றன.

Advertisement